search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீடூ எதிரொலி- ஐசிசி கூட்டத்தில் பங்கேற்பதில் இருந்து விலகினார் ராகுல் ஜோரி
    X

    மீடூ எதிரொலி- ஐசிசி கூட்டத்தில் பங்கேற்பதில் இருந்து விலகினார் ராகுல் ஜோரி

    மீடூ பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ராகுல் ஜோர ஐசிசி கூட்டத்தில் பங்கேற்பதில் இருந்து விலகியுள்ளார். #MeToo #BCCI
    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஜோரி. கிரிக்கெட் வாரியத்துக்கு வருவதற்கு முன்பு இவர் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றினார். இந்த நிலையில் ராகுல் ஜோரி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெண் பத்திரிகையாளர் ஒருவர் சமீபத்தில் ‘மீடூ’ ஹேஸ்டேக்கில் குற்றம்சாட்டி இருந்தார்.

    இதைத்தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியம் அவரிடம் 1 வாரத்துக்குள் விளக்கம் அளிக்குமாறு கேட்டது. அவர் அதற்கு மேலும் கால அவகாசம் கேட்டு இருந்தார். இதனால் ஐசிசி கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று கூறியிருந்தார்.



    இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைமை நிர்வாக அதிகாரிகள் கூட்டம் வருகிற 17 மற்றும் 18-ந்தேதியில் சிங்கப்பூரில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் ராகுல் ஜோரி கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டதால் அவர் பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவருக்கு பதிலாக கிரிக்கெட் வாரிய செயலாளர் அமிதாப் சவுத்ரி கலந்து கொள்ள இருக்கிறார்.
    Next Story
    ×