search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரித்வி ஷாவை சேவாக் உடன் ஒப்பிடும் முன் இருமுறை யோசிக்க வேண்டும்- காம்பீர்
    X

    பிரித்வி ஷாவை சேவாக் உடன் ஒப்பிடும் முன் இருமுறை யோசிக்க வேண்டும்- காம்பீர்

    பிரித்வி ஷாவை சேவாக் உடன் ஒப்பிடும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும் என்று காம்பீர் தெரிவித்துள்ளார். #INDvWI #PrithviShaw
    ராஜ்கோட்டில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்டில் அறிமுக வீரரான பிரித்வி ஷா அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அதுவும் 99 பந்தில் 15 பவுண்டரியுடன் குறைந்த பந்தில் அடித்ததால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    அதிரடியாக விளையாடியதால் அவரை சேவாக்குடனும், இளம் வயதிலேயே செஞ்சூரி அடித்ததால் சச்சின் தெண்டுல்கருடனும் ஒப்பிட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில் சேவாக் உடன் பிரித்வி ஷாவை ஒப்பிடும் முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசனை செய்ய வேண்டும் என்று காம்பீர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து காம்பீர் கூறுகையில் ‘‘பிரித்வி ஷாவை சேவாக்குடன் யார் ஒப்பிடு செய்தாலும் அதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசனை செயய வேண்டும். இறுதியாக ஒருவரை மற்றொருவருடன் ஒப்பிடக்கூடாது. பிரித்வி ஷா தற்போதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டை தொடங்கியுள்ளார். அவர் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. நான் ஒருபோதும் ஒப்பிடை நம்புவதில்லை.



    பிரித்வி ஷா தனிப்பட்ட திறமையை பெற்றுள்ளார். அதேபோல் சேவாக் அவரது திறமையை பெற்றுள்ளார். பிரித்வி ஷா தற்போதுதான் அறிமுகம் ஆகியுள்ளார். சேவாக்கை போன்றோர் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளனர்.

    பிரித்வி ஷா தனது டெஸ்ட் கிரிக்கெட்டை சிறந்த முறையில் தொடங்கியுள்ளார். ஆனால், அவருக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது’’ என்றார்.
    Next Story
    ×