என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரித்வி ஷாவை சேவாக் உடன் ஒப்பிடும் முன் இருமுறை யோசிக்க வேண்டும்- காம்பீர்
Byமாலை மலர்10 Oct 2018 2:46 PM GMT (Updated: 10 Oct 2018 2:46 PM GMT)
பிரித்வி ஷாவை சேவாக் உடன் ஒப்பிடும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும் என்று காம்பீர் தெரிவித்துள்ளார். #INDvWI #PrithviShaw
ராஜ்கோட்டில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்டில் அறிமுக வீரரான பிரித்வி ஷா அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அதுவும் 99 பந்தில் 15 பவுண்டரியுடன் குறைந்த பந்தில் அடித்ததால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
அதிரடியாக விளையாடியதால் அவரை சேவாக்குடனும், இளம் வயதிலேயே செஞ்சூரி அடித்ததால் சச்சின் தெண்டுல்கருடனும் ஒப்பிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் சேவாக் உடன் பிரித்வி ஷாவை ஒப்பிடும் முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசனை செய்ய வேண்டும் என்று காம்பீர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காம்பீர் கூறுகையில் ‘‘பிரித்வி ஷாவை சேவாக்குடன் யார் ஒப்பிடு செய்தாலும் அதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசனை செயய வேண்டும். இறுதியாக ஒருவரை மற்றொருவருடன் ஒப்பிடக்கூடாது. பிரித்வி ஷா தற்போதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டை தொடங்கியுள்ளார். அவர் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. நான் ஒருபோதும் ஒப்பிடை நம்புவதில்லை.
பிரித்வி ஷா தனிப்பட்ட திறமையை பெற்றுள்ளார். அதேபோல் சேவாக் அவரது திறமையை பெற்றுள்ளார். பிரித்வி ஷா தற்போதுதான் அறிமுகம் ஆகியுள்ளார். சேவாக்கை போன்றோர் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளனர்.
பிரித்வி ஷா தனது டெஸ்ட் கிரிக்கெட்டை சிறந்த முறையில் தொடங்கியுள்ளார். ஆனால், அவருக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது’’ என்றார்.
அதிரடியாக விளையாடியதால் அவரை சேவாக்குடனும், இளம் வயதிலேயே செஞ்சூரி அடித்ததால் சச்சின் தெண்டுல்கருடனும் ஒப்பிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் சேவாக் உடன் பிரித்வி ஷாவை ஒப்பிடும் முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசனை செய்ய வேண்டும் என்று காம்பீர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காம்பீர் கூறுகையில் ‘‘பிரித்வி ஷாவை சேவாக்குடன் யார் ஒப்பிடு செய்தாலும் அதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசனை செயய வேண்டும். இறுதியாக ஒருவரை மற்றொருவருடன் ஒப்பிடக்கூடாது. பிரித்வி ஷா தற்போதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டை தொடங்கியுள்ளார். அவர் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. நான் ஒருபோதும் ஒப்பிடை நம்புவதில்லை.
பிரித்வி ஷா தனிப்பட்ட திறமையை பெற்றுள்ளார். அதேபோல் சேவாக் அவரது திறமையை பெற்றுள்ளார். பிரித்வி ஷா தற்போதுதான் அறிமுகம் ஆகியுள்ளார். சேவாக்கை போன்றோர் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளனர்.
பிரித்வி ஷா தனது டெஸ்ட் கிரிக்கெட்டை சிறந்த முறையில் தொடங்கியுள்ளார். ஆனால், அவருக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X