search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புஜாராவிற்கு ஓய்வு கொடுத்திருக்கனும்- சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சொல்கிறார்
    X

    புஜாராவிற்கு ஓய்வு கொடுத்திருக்கனும்- சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சொல்கிறார்

    வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் புஜாராவிற்கு ஓய்வு கொடுத்திருக்கனும் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார். #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து தொடரில் இந்தியா 1-4 எனத் தோல்வியை தழுவியது.

    இந்திய தொடக்க பேட்ஸ்மேன்கள் ஆன ஷிகர் தவான், முரளி விஜய் ஆகியோர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து நீக்கப்பட்டனர். அவர்களுக்குப் பதிலாக பிரித்வி ஷா, மயாங்க் அகர்வால் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைத்தது.

    நேற்று தொடங்கிய ஆட்டத்தில் பிரித்வி ஷாவிற்கு ஆடும் லெவன் அணியில் இடம்கிடைத்தது. ஆனால் மயாங்க் அகர்வாலுக்கு இடம் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் புஜாராவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டு மயாங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டிருக்கனும் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறுகையில் ‘‘பேட்டிங் தகுதியை வைத்து வீரர்களை தேர்வு செய்ததற்காக நான் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். சீனியர் வீரரான புஜாராவிற்கு ஓய்வு கொடுத்து மற்றொரு புதுமுக வீரரான மயாங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கனும்.

    புஜாரா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக அதிக ரன்கள் குவிப்பார். ஏற்கனவே, சொந்த மண்ணில் புஜாரா அதிக ரன்கள் குவித்துள்ளார். இன்னொரு பேட்ஸ்மேனுக்கு வாய்ப்பு கொடுத்து வெளிநாட்டு மண்ணில் சாதிக்க புதிய பேட்ஸ்மேன்களை உருவாக்க முயற்சி செய்யலாம்’’ என்றார்.
    Next Story
    ×