என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரொனால்டோ என்னை கற்பழித்தார்- அமெரிக்க பெண் பேட்டியால் மீண்டும் பரபரப்பு
Byமாலை மலர்30 Sep 2018 9:46 AM GMT (Updated: 30 Sep 2018 9:46 AM GMT)
உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தன்னை கற்பழித்தார் என்று அமெரிக்க பெண் தற்போது கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Ronaldo
உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த இவர் கிளப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி முத்திரை பதித்து வருகிறார்.
33 வயதான ரொனால்டோ கடந்த 9 ஆண்டுகளாக ஸ்பெயினில் உள்ள ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடினார். அந்த அணிக்காக 451 கோல்கள் அடித்து கிளப் வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
ரொனால்டோ சமீபத்தில் அதில் இருந்து விலகி இத்தாலியில் உள்ள யுவான்டஸ் கிளப்பில் இணைந்தார். 4 வருடத்துக்கு ரூ.849 கோடிக்கு ஒப்பந்தமானார்.
இந்த நிலையில் ரொனால்டோ மீது அமெரிக்க மாடல் அழகி கேத்ரின் மயோர்கா ரொனால்டோ என்னை கற்பழித்தார் என்று ஜெர்மனி பத்திரிகைக்கு பேட்டியளித்ததால், 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரொனால்டோவுடன் கேத்ரின் (பழைய படம்)
2009-ம் ஆண்டு லாஸ் வேகாஸ் நகரில் உள்ள விடுதியில் ரொனால்டோ தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதுகுறித்து வெளியே வாயை திறக்காமல் இருக்க ரூ. 2.7 கோடி அளித்தார் என்றும் அந்த பெண் ஜெர்மனி பத்திரிகை ஒன்றில் குற்றம்சாட்டியுள்ளார். அவரது இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரொனால்டோவின் வக்கீல் பெர்க்மான் இதை மறுத்துள்ளார். ரொனால்டோ மீது கூறப்பட்ட கற்பழிப்பு புகார் தொடர்பாக 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் லாஸ் வேகாஸ் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
33 வயதான ரொனால்டோ கடந்த 9 ஆண்டுகளாக ஸ்பெயினில் உள்ள ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடினார். அந்த அணிக்காக 451 கோல்கள் அடித்து கிளப் வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
ரொனால்டோ சமீபத்தில் அதில் இருந்து விலகி இத்தாலியில் உள்ள யுவான்டஸ் கிளப்பில் இணைந்தார். 4 வருடத்துக்கு ரூ.849 கோடிக்கு ஒப்பந்தமானார்.
இந்த நிலையில் ரொனால்டோ மீது அமெரிக்க மாடல் அழகி கேத்ரின் மயோர்கா ரொனால்டோ என்னை கற்பழித்தார் என்று ஜெர்மனி பத்திரிகைக்கு பேட்டியளித்ததால், 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரொனால்டோவுடன் கேத்ரின் (பழைய படம்)
2009-ம் ஆண்டு லாஸ் வேகாஸ் நகரில் உள்ள விடுதியில் ரொனால்டோ தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதுகுறித்து வெளியே வாயை திறக்காமல் இருக்க ரூ. 2.7 கோடி அளித்தார் என்றும் அந்த பெண் ஜெர்மனி பத்திரிகை ஒன்றில் குற்றம்சாட்டியுள்ளார். அவரது இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரொனால்டோவின் வக்கீல் பெர்க்மான் இதை மறுத்துள்ளார். ரொனால்டோ மீது கூறப்பட்ட கற்பழிப்பு புகார் தொடர்பாக 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் லாஸ் வேகாஸ் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X