search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்எஸ் டோனி உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும்- சுனில் கவாஸ்கர்
    X

    எம்எஸ் டோனி உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும்- சுனில் கவாஸ்கர்

    இந்திய ஒருநாள் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன எம்எஸ் டோனி உள்ளூர் போட்டியில் விளையாட வேண்டும் என் கவாஸ்கர் கூறியுள்ளார். #MSDhoni
    இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் டோனி. கேப்டன் பதவியில் இருந்து விலகிய டோனி, தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். 2018 ஐபிஎல் தொடரில் எம்எஸ் டோனி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் சர்வதேச போட்டிகளில் பெரிய அளவில் சாதிக்கவில்லை.

    எம்எஸ் டோனி தனது பழைய ஆட்டத்திற்கு திரும்பி உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.



    இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில் ‘‘எம்எஸ் டோனி உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாட வேண்டுமா என்று கேட்டால், கட்டாயம் டோனி உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாட வேண்டும். நான்கு நாட்கள் கொண்ட உள்ளூர் தொடரில் விளையாடினால், வளர்ந்து வரும் ஜார்க்கண்ட் வீரர்களுக்கு அது உதவிகரமாக இருக்கும்.

    50-வது ஓவர் கிரிக்கெட்டில் குறைந்த வாய்ப்புகள்தான் கிடைக்கும். ஆனால் நான்கு நாட்கள் கொண்ட  போட்டியில் விளையாடினால் நீண்ட இன்னிங்ஸ் விளையாட வாய்ப்பு கிடைக்கும். அது ஒருநாள் போட்டிக்கு பயன்படும்’’ என்றார்.
    Next Story
    ×