என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரோகித் சர்மாவின் கேப்டன் திறமை- வாசிம் அக்ரம் மனதார வாழ்த்து
Byமாலை மலர்25 Sep 2018 10:39 AM GMT (Updated: 25 Sep 2018 10:39 AM GMT)
ரோகித் சர்மாவின் கேப்டன் திறமையை பார்த்து பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் மனதார வாழ்த்தியுள்ளார். #AsiaCup2018 #RohitSharma
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று விளையாடும் இந்திய அணிக்கு ரோகித் சர்மா தலைமை ஏற்றுள்ளார். இவரது தலைமையில் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
விராட் கோலி இல்லாத இந்திய அணியை ரோகித் சர்மாவால் பொறுப்பேற்று நடத்த முடியும் என்று ஹர்பஜன் சிங் கூறிய நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் மனதார வாழ்த்தியுள்ளார்.
இதுகுறித்து வாசிம் அக்ரம் கூறுகையில் ‘‘இந்திய அணி கேப்டனாக ரோகித் சர்மா, அவரது வேலையை சிறப்பாக செய்துள்ளார். அவர் முன்னின்று அணியை வழி நடத்துகிறார். அவர் தொடர்ந்து மிகவும் எளிதாக ரன்கள் குவித்து வருகிறார்.
அவருடன் துணைக் கேப்டன் ஆன ஷிகர் தவானும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர்கள் பேட்டிங் செய்ய வரும்போது, மிகவும் சிறப்பாக உள்ளோம் என்பதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு ஷாட்டையும் அடிக்கும் திறன் பெற்றிருக்கிறார்கள்’’ என்றார்.
விராட் கோலி இல்லாத இந்திய அணியை ரோகித் சர்மாவால் பொறுப்பேற்று நடத்த முடியும் என்று ஹர்பஜன் சிங் கூறிய நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் மனதார வாழ்த்தியுள்ளார்.
இதுகுறித்து வாசிம் அக்ரம் கூறுகையில் ‘‘இந்திய அணி கேப்டனாக ரோகித் சர்மா, அவரது வேலையை சிறப்பாக செய்துள்ளார். அவர் முன்னின்று அணியை வழி நடத்துகிறார். அவர் தொடர்ந்து மிகவும் எளிதாக ரன்கள் குவித்து வருகிறார்.
அவருடன் துணைக் கேப்டன் ஆன ஷிகர் தவானும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர்கள் பேட்டிங் செய்ய வரும்போது, மிகவும் சிறப்பாக உள்ளோம் என்பதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு ஷாட்டையும் அடிக்கும் திறன் பெற்றிருக்கிறார்கள்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X