என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆசிய கோப்பை கிரிக்கெட் - இந்திய அணியில் ஜடேஜா, சித்தார்த் கவுல்- துபாய் பறக்கிறார்கள்
Byமாலை மலர்20 Sep 2018 8:32 AM GMT (Updated: 20 Sep 2018 8:32 AM GMT)
இந்திய அணியில் இடம்பிடித்துள்ள அக்சார் பட்டேல், ஷர்துல் தாகூருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் ஜடேஜா, சித்தார்த் கவுல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். #AsiaCup2018
இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் பங்கேற்று விளையாடும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இந்தியா நேற்று பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சூப்பர் 4 பிரிவில் வங்காள தேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை இந்தியா எதிர்கொள்கிறது. இதில் சிறப்பாக செயல்பட்டால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
இந்திய அணியில் ஷர்துல் தாகூர், அக்சார் பட்டேல் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர். தற்போது ஷர்துல் தாகூருக்கு இடுப்பு பகுதியிலும், அக்சார் பட்டேலுக்கு கை பெருவிரலிலும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இருவருக்கும் பதிலாக சித்தார்த் கவுல் மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருவரும் உடனடியாக துபாய் சென்று அணியில் இணைய இருக்கிறார்கள்.
ஏற்கனவே ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக தீபக் சாஹர் அணியில் சேர்க்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் 4 பிரிவில் வங்காள தேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை இந்தியா எதிர்கொள்கிறது. இதில் சிறப்பாக செயல்பட்டால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
இந்திய அணியில் ஷர்துல் தாகூர், அக்சார் பட்டேல் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர். தற்போது ஷர்துல் தாகூருக்கு இடுப்பு பகுதியிலும், அக்சார் பட்டேலுக்கு கை பெருவிரலிலும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இருவருக்கும் பதிலாக சித்தார்த் கவுல் மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருவரும் உடனடியாக துபாய் சென்று அணியில் இணைய இருக்கிறார்கள்.
ஏற்கனவே ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக தீபக் சாஹர் அணியில் சேர்க்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X