என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேப்டன் பதவி வகிப்பது பதற்றம் அளிக்கிறது - ரோகித் சர்மா
Byமாலை மலர்18 Sep 2018 5:20 AM GMT (Updated: 18 Sep 2018 5:20 AM GMT)
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் கேப்டன் பதவியை ஏற்று இருப்பது உற்சாகம் அளித்தாலும், சற்று பதற்றமாகவும் இருக்க தான் செய்கிறது என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா கூறினார். #AsiaCup2018 #RohitSharma
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா துபாயில் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டன் பதவி வகிப்பது பெரிய பொறுப்பாகும். இதற்கு முன்பு சில போட்டி தொடர்களில் நான் கேப்டன் பதவியை வகித்து இருக்கிறேன். ஆனாலும் என்னை பொறுத்தமட்டில் இது பெரிய போட்டியாகும். இந்த போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.
கேப்டன் பதவியை ஏற்று இருப்பது உற்சாகம் அளித்தாலும், அதேநேரத்தில் சற்று பதற்றமாகவும் இருக்க தான் செய்கிறது. அணியில் உள்ள வீரர்களுடன் நான் இணைந்து விளையாடி இருக்கிறேன். இதனால் வீரர்களை பற்றி எனக்கு நன்கு தெரியும்.
2014-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் நாங்கள் இங்கு விளையாடி இருக்கிறோம். அதன் பிறகு தற்போது தான் இங்கு விளையாட இருக்கிறோம். இன்றைய ஆட்டம் ஆடுகளத்தின் தன்மையை அறிய எங்களுக்கு நல்ல வாய்ப்பாகும். எல்லா வரிசையிலும் விளையாட திறமையான வீரர்கள் எங்களிடம் உள்ளனர். நல்ல பவுலர்களும் இருக்கிறார்கள். எங்களது உயர்வான ஆட்டத்தை வெளிப்படுத்துவது முக்கியமானதாகும்’ என்று தெரிவித்தார். #AsiaCup2018 #RohitSharma
கேப்டன் பதவியை ஏற்று இருப்பது உற்சாகம் அளித்தாலும், அதேநேரத்தில் சற்று பதற்றமாகவும் இருக்க தான் செய்கிறது. அணியில் உள்ள வீரர்களுடன் நான் இணைந்து விளையாடி இருக்கிறேன். இதனால் வீரர்களை பற்றி எனக்கு நன்கு தெரியும்.
2014-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் நாங்கள் இங்கு விளையாடி இருக்கிறோம். அதன் பிறகு தற்போது தான் இங்கு விளையாட இருக்கிறோம். இன்றைய ஆட்டம் ஆடுகளத்தின் தன்மையை அறிய எங்களுக்கு நல்ல வாய்ப்பாகும். எல்லா வரிசையிலும் விளையாட திறமையான வீரர்கள் எங்களிடம் உள்ளனர். நல்ல பவுலர்களும் இருக்கிறார்கள். எங்களது உயர்வான ஆட்டத்தை வெளிப்படுத்துவது முக்கியமானதாகும்’ என்று தெரிவித்தார். #AsiaCup2018 #RohitSharma
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X