search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலியால் வருமானம் போச்சு என புலம்பும் ஒளிபரப்பு நிறுவனம்- பிசிசிஐ பதிலடி
    X

    விராட் கோலியால் வருமானம் போச்சு என புலம்பும் ஒளிபரப்பு நிறுவனம்- பிசிசிஐ பதிலடி

    விராட் கோலி அப்செண்ட்-ஆல் வருமானம் போச்சு என்று கடிதம் எழுதிய ஸ்டார் இந்தியா நிறுவனத்திற்கு பிசிசிஐ பதிலடி கொடுத்துள்ளது. #BCCI #StarIndia #AsiaCup2018
    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் அணிகள் பங்கேற்று விளையாடும் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரை ஸ்டார் இந்தியா நிறுவனம் ஒளிபரப்பும் உரிமையை பெற்றுள்ளது. இந்திய அணியின் கேப்டனும், உலகின் நட்சத்திர வீரரும் ஆன விராட் கோலி இந்த தொடரில் விளையாடவில்லை. இங்கிலாந்து மண்ணில் 84 நாட்கள் சுற்றுப் பயணம் செய்து தலா மூன்று ஒருநாள் மற்றும் டி20, ஐந்து டெஸ்ட் போட்டியில் விளையாடியதால் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்திய அணி விராட் கோலி அணியில் இடம்பிடித்திருந்தால் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி இன்னும் கூடுதல் பலம் பெற்றிருக்கும். இதன் மூலம் அதிக வருமானம் ஈட்டலாம் என ஸ்டார் இந்தியா திட்டமிட்டிருந்தது.



    விராட் கோலி ஓய்வால் தங்களது வருமானத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கருதிய ஸ்டார் இந்தியா போட்டியின் ஒருங்கிணைப்பாளரான ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு ஒரு மெயில் அனுப்பியது. இந்த மெயில் பிசிசிஐ-க்கும் இணைக்கப்பட்டது. அந்த மெயிலில் ‘‘தலைசிறந்த வீரரான விராட் கோலி அணியில் இடம்பெறவில்லை என்பதை 15 நாட்களுக்கு முன்புதான் தெரிவிக்கப்பட்டது. இதனால் எங்களுக்க பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வருவாயில் பெரும் தாக்கத்த்தை ஏற்படுத்தும். மேலும், ஒப்பந்தத்தின்போது சிறந்த தேசிய அணியை அனுப்பும் வகையில் வலியுறுத்த வேண்டும்’’ என்று கூறியிருந்தது.

    இந்நிலையில் பிசிசிஐ, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு பதில் அளித்துள்ளது. அதில் ‘‘இந்திய அணியின் தேர்வை ஒளிபரப்பும் நிறுவனம் முடிவு செய்ய முடியாது. எங்களுடைய தேசிய அணியை தேர்வு செய்வது பிசிசிஐ-யின் தனியுரிமையாகும். இதில் வெளியில் இருந்து எந்தவொரு குறுக்கிட்டையும் அனுமதிக்க முடியாது’’ என்று பதிலடி கொடுத்துள்ளது.
    Next Story
    ×