search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அகில இந்திய ஆக்கி: ஐ.ஓ.சி. அணி சாம்பியன்
    X

    அகில இந்திய ஆக்கி: ஐ.ஓ.சி. அணி சாம்பியன்

    அகில இந்திய ஆக்கி போட்டியில் ஐ.ஓ.சி. அணி 4-0 என்ற கோல் கணக்கில் ரெயில்வே அணியை தோற்கடித்து 4-வது முறையாக சாம்பியன் கோப்பையை உச்சிமுகர்ந்தது. #Hockey #IOC #Champion #Railway
    சென்னை:

    92-வது எம்.சி.சி.-முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியன் ஆயில் கார்பரேஷன் (ஐ.ஓ.சி.), இந்தியன் ரெயில்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி அசத்திய ஐ.ஓ.சி. அணி 4-0 என்ற கோல் கணக்கில் ரெயில்வே அணியை தோற்கடித்து 4-வது முறையாக சாம்பியன் கோப்பையை உச்சிமுகர்ந்தது. ஐ.ஓ.சி. அணியில் ரோஷன் மின்ஸ் (14-வது நிமிடம்), குர்ஜிந்தர் சிங் (18-வது நிமிடம்), தல்விந்தர்சிங் (21-வது நிமிடம்), பாரத் சிக்ரா (52-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர்.

    இந்த தொடரில் தோல்வியே சந்திக்காமல் வாகை சூடிய ஐ.ஓ.சி. அணிக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. 2-வது இடத்தை பிடித்த ரெயில்வே அணிக்கு ரூ.2½ லட்சம் கிடைத்தது. இது தவிர, சிறந்த முன்கள வீரராக பர்தீப்சிங் (ரெயில்வே), சிறந்த நடுகள வீரராக பவால் லக்ரா (இந்திய ராணுவம்), சிறந்தகோல் கீப்பராக குர்விந்தர்சிங் (பஞ்சாப் சிந்து வங்கி), தொடரின் சிறந்த வளரும் வீரராக வீர தமிழன் (சென்னை ஆக்கி சங்கம்), ஆட்டநாயகனாக குர்ஜிந்தர்சிங் (ஐ.ஓ.சி.) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் மற்றும் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது.  #Hockey #IOC #Champion #Railway
    Next Story
    ×