search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருநங்கைகள் நிகழ்ச்சியில் பெண் வேடத்தில் கலந்து கொண்ட கம்பீர்
    X

    திருநங்கைகள் நிகழ்ச்சியில் பெண் வேடத்தில் கலந்து கொண்ட கம்பீர்

    டெல்லியில் திருநங்கைகள் மட்டும் பங்கேற்கும் ‘ஹிஜ்ரா ஹப்பா’ எனும் விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சியில் கம்பீர் துப்பட்டா அணிந்து பெண் போன்ற அலங்காரத்துடன் தோன்றி திருநங்கைகளை உற்சாகப்படுத்தினார். #GautamGambhir #Transgender
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் பல்வேறு சமூக உதவிகளை செய்து வருகிறார். சமூக பிரச்சினைகள் குறித்தும் அவ்வப்போது டுவிட்டரில் தனது கருத்தை பதிவிடுகிறார். இந்த நிலையில் டெல்லியில் மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகள் மட்டும் பங்கேற்கும் ‘ஹிஜ்ரா ஹப்பா’ எனும் விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சிக்கு கம்பீர் அழைக்கப்பட்டு இருந்தார். இதனை ஏற்று கம்பீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    விழாவில் கம்பீர் துப்பட்டா அணிந்து பெண் போன்ற அலங்காரத்துடன் தோன்றி திருநங்கைகளை உற்சாகப்படுத்தினார். திருநங்கைகளுடன் அவர் இருக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கம்பீரின் இந்த மனிதநேய செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.



    இது தொடர்பாக கம்பீர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘ஆண் அல்லது பெண்ணாக இருப்பது விஷயமல்ல. மனித நேயம் மிக்க மனிதர்களாக இருப்பது தான் முக்கியம். திருநங்கைகளான அபினா அஹிர், சிம்ரன் சாஹிக் ஆகியோர் எனக்கு ராக்கி கயிறு கட்டி சகோதரராக ஏற்றுக்கொண்டனர். நானும் அவர்களை சகோதரிகளாக பெருமையுடன் ஏற்றுக் கொண்டேன். நீங்களும் அவர்களை சகோதரிகளாக ஏற்பீர்களா?’ என்று குறிப்பிட்டுள்ளார்.  #GautamGambhir  #Transgender

    Next Story
    ×