search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோகித் சர்மா, தவான் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார்கள்- பிரெட் லீ
    X

    ரோகித் சர்மா, தவான் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார்கள்- பிரெட் லீ

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா, தவான் இந்தியாவின் பேட்டிங் முதுகெலும்பாக இருப்பார்கள் என பிரெட் லீ தெரிவித்துள்ளார். #AsiaCup2018
    ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 15-ந்தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ரோகித் சர்மா கேப்டனாகவும், தவான் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    விராட் கோலி இல்லாதது இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ, விராட் கோலி இல்லாத நிலையில் ரோகித் சர்மா, தவான் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார்கள் என்று கூறியுள்ளார்.



    இதுகுறித்து பிரெட் லீ கூறுகையில் ‘‘விராட் கோலி அணியில் இல்லாதபோது, ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் இந்திய அணிக்கு கீ பேட்ஸ்மேனாக இருப்பார்கள். விராட் கோலி சிறப்பாக விளையாடுவார். அதேபோல் இந்திய அணியும் சிறப்பாக விளையாடும் என்று நம்புகிறேன். இந்திய அணியை வழிநடத்திச் செல்லும்போது ரோகித் சர்மாவிற்கு கூடுதலாக பொறுப்பு இருக்கும்’’ என்றார்.
    Next Story
    ×