search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பீல்டிங் கோச்சராக நியூசிலாந்து முன்னாள் வீரர் நியமனம்
    X

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பீல்டிங் கோச்சராக நியூசிலாந்து முன்னாள் வீரர் நியமனம்

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பீல்டர் கோச்சராக நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் கிரான்ட் பிராட்பர்ன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். #PCB
    பாகிஸ்தான் அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தலைசிறந்த அணியாக திகழ்ந்து வருகிறது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் எதிரணிக்கு கடும் சவாலாக விளங்கும் அதேவேளையில், பீல்டிங்கில் சற்று பலவீனமாக காணப்படுகிறது.



    இதனால் பீல்டிங் கோச்சரை நியமிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான கிரான்ட் பிராட்பர்ன்-ஐ பீல்டிங் கோச்சராக நியமனம் செய்துள்ளது. இவர் ஆசிய கோப்பையில் இருந்து பாகிஸ்தான் அணியின் கோச்சராக செயல்படுவார்.

    கிரான்ட் பிராட்பர்ன் நியூசிலாந்து அணிக்காக 1990 முதல் 2001 வரை 7 டெஸ்ட் மற்றும் 11 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
    Next Story
    ×