என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆடுகளத்தில் பந்து நன்கு ஸ்விங் ஆனது- பும்ரா
Byமாலை மலர்31 Aug 2018 6:11 AM GMT (Updated: 31 Aug 2018 6:11 AM GMT)
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் நாங்கள் எதிர்பார்த்தை விட ஆடுகளத்தில் பந்து நன்கு ஸ்விங் ஆனது என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கூறியுள்ளார். #ENGvIND #JaspritBumrah
சவுதம்டன்:
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி நேற்று சவுதம்டனில் தொடங்கியது.
டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி இந்தியாவின் வேகப்பந்து வீச்சில் விக்கெட்டுகளை இழந்து திணறியது. 86 ரன்னுக்கு 6 விக்கெட்டை இழந்தது. அதன்பின் மொய்ன் அலி, சாம் குர்ரன் ஜோடி சரிவில் இருந்து மீட்டது.
சாம்குர்ரன் 78 ரன்னும், மொய்ன்அலி 40 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து 76.4 ஓவரில் 246 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.
இந்திய தரப்பில் பும்ரா 3 விக்கெட்டும், இஷாந்த்சர்மா, முகமது சமி, அஸ்வின் தலா 2 விக்கெட்டும், பாண்ட்யா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் விளையாடிய இந்தியா, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன் எடுத்து இருந்தது. ஷிகா தவான் 3 ரன்னுடனும், லோகேஷ் ராகவ் 11 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
நேற்றைய போட்டியில் காலை வேளையில் நன்கு வெயில் அடித்தது. இதனால் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாகதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். பந்தை நன்கு ஸ்விங் செய்து இங்கிலாந்து வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர்.
இதுகுறித்து வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கூறியதாவது:-
நாங்கள் எதிர்பார்த்தை விட ஆடுகளத்தில் பந்து நன்கு ஸ்விங் ஆனது. இதன் காரணமாகவே விரைவில் விக்கெட்டுகளை கைப்பற்ற முடிந்தது.
இவ்வாறு அவர் கூறினார். #ENGvIND #JaspritBumrah
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி நேற்று சவுதம்டனில் தொடங்கியது.
டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி இந்தியாவின் வேகப்பந்து வீச்சில் விக்கெட்டுகளை இழந்து திணறியது. 86 ரன்னுக்கு 6 விக்கெட்டை இழந்தது. அதன்பின் மொய்ன் அலி, சாம் குர்ரன் ஜோடி சரிவில் இருந்து மீட்டது.
சாம்குர்ரன் 78 ரன்னும், மொய்ன்அலி 40 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து 76.4 ஓவரில் 246 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.
இந்திய தரப்பில் பும்ரா 3 விக்கெட்டும், இஷாந்த்சர்மா, முகமது சமி, அஸ்வின் தலா 2 விக்கெட்டும், பாண்ட்யா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் விளையாடிய இந்தியா, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன் எடுத்து இருந்தது. ஷிகா தவான் 3 ரன்னுடனும், லோகேஷ் ராகவ் 11 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
நேற்றைய போட்டியில் காலை வேளையில் நன்கு வெயில் அடித்தது. இதனால் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாகதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். பந்தை நன்கு ஸ்விங் செய்து இங்கிலாந்து வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர்.
இதுகுறித்து வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கூறியதாவது:-
நாங்கள் எதிர்பார்த்தை விட ஆடுகளத்தில் பந்து நன்கு ஸ்விங் ஆனது. இதன் காரணமாகவே விரைவில் விக்கெட்டுகளை கைப்பற்ற முடிந்தது.
இவ்வாறு அவர் கூறினார். #ENGvIND #JaspritBumrah
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X