search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிசிசிஐ-யின் வாழ்நாள் தடையை எதிர்த்து ஸ்ரீசந்த் வழக்கு- விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்
    X

    பிசிசிஐ-யின் வாழ்நாள் தடையை எதிர்த்து ஸ்ரீசந்த் வழக்கு- விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வாழ்நாள் தடையை எதிர்த்து ஸ்ரீசந்த் வழக்கு தொடர்ந்துள்ளார். இதை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. #BCCI #Sreesanth
    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் ஸ்ரீசந்த். கேரளாவைச் சேர்ந்த இவர், கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டார்.

    இதுதொடர்பானை வழக்கு விசாரணை டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதற்கிடையில் ஸ்ரீசந்த்திற்கு பிசிசிஐ வாழ்நாள் தடைவிதித்தது.

    2015-ம் ஆண்டு பாட்டியாலா கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது ஸ்ரீசந்த் நிரபராதி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் ஸ்ரீசந்த் மீதான வாழ்நாள் தடையை பிசிசிஐ நீக்கவில்லை.

    இதனால் கேரளாவில் உள்ள உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீசந்த் மனுதாக்கல் செய்தார். அப்போது பிசிசிஐ விதித்துள்ள வாழ்நாள் தடையை நீக்கி தனி நீதிபதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து டிவிஷன் பெஞ்ச்-ல் பிசிசிஐ மேல்முறையீடு செய்தது. அப்போது தனி நீதிபதி உத்தரவு செல்லாது என அறிவித்தது.



    இந்நிலையில் பிசிசிஐ வாழ்நாள் தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழங்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, மற்றும் நீதிபதிகள் ஏஎம் கன்வில்கர், டிஒய் சந்த்ரசுட் கொண்ட பெஞ்ச் இந்த வழக்கை விசாரிக்க இருக்கிறது.

    ஸ்ரீசந்த் தனது மனுவில், நான் கடந்த ஐந்தாண்டுகளாக தொழில்முறை கிரிக்கெட்டில் விளையாடாமல் இருக்கிறேன். இதுவே போதுமான தண்டனையாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×