search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துலீப் கிரிக்கெட் டிராபி: 3ம் நாள் ஆட்ட முடிவில் இரண்டாவது இன்னிங்சில் இந்தியா ரெட் 156/3
    X

    துலீப் கிரிக்கெட் டிராபி: 3ம் நாள் ஆட்ட முடிவில் இரண்டாவது இன்னிங்சில் இந்தியா ரெட் 156/3

    இந்தியா ப்ளூ அணிக்கெதிரான துலீப் கிரி்க்கெட் போட்டியில் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா ரெட் அணி இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்துள்ளது. #DuleepTrophy
    இந்தியா ரெட், ப்ளூ, க்ரீன் அணிகளுக்கு இடையிலான துலீப் டிராபி நான்கள் நாட்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 17-ந்தேதி தொடங்கிய இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா ரெட் - க்ரீன் அணிகள் மோதின. இந்த ஆட்டம் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.

    இந்நிலையில், 2-வது ஆட்டம் திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் இந்தியா ரெட் - ப்ளூ அணிகள் விளையாடி வருகின்றன.

    டாஸ் வென்ற இந்தியா ரெட் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர் சஞ்சய் 72 ரன்கள் சேர்த்தார். பாபா அபரஜித் 48 ரன்களும், அஷுடோஷ் சிங் 46 ரன்னும், சித்தேஷ் லாட் 88 ரன்களும் அடிக்க 316 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    இந்தியா ப்ளூ அணி சார்பில் சவுரப் குமார, வகார் தலா மூன்று விக்கெட்டுக்களும், ஐயப்பா மற்றும உனத்கட் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

    அதன்பின், இந்தியா ப்ளூ முதல் இன்னிங்சை ஆடியது. அந்த் அணியின் துருவ் ஷோரி மட்டும் ஓரளவு தாக்கு பிடித்து விளையாடி 97 ரன்கள் எடுத்தார். ரிக்கி புயி 41 ரன்களிலும், ஜெயதேவ் உனத்கட் மற்றும் தவாய் குல்கர்னி ஆகியோர் 39 ரன்களிலும் அவுட்டாகினர். இறுதியில், இந்தியா ப்ளூ 293 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா ரெட் சார்பில் பர்வேஸ் ரசூல் 4 விக்கெட்டும், ரஜ்னீஷ் குர்பானி, அபிமன்யு மிதுன், பாபா அபராஜித் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 23 ரன்கள் முன்னிலையுடன் இந்திய ரெட் அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியின் அபினவ் முகுந்த அரை சதமடித்து அவுட்டானார். சித்தேஷ் லாட் 47 ரன்னுடனும், அக்‌ஷய் வத்கர் 30 ரன்னுடனும் அவுட்டாகாமல் உள்ளனர். இதுவரை இந்தியா ரெட் அணி 179 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. #DuleepTrophy
    Next Story
    ×