search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்பி மூலம் சிறுவனின் வேண்டுகோளை நிறைவேற்றிய விராட் கோலி
    X

    செல்பி மூலம் சிறுவனின் வேண்டுகோளை நிறைவேற்றிய விராட் கோலி

    இந்திய அணி கேப்டனான விராட் கோலி, சிறுவனின் வேண்டுகோளை ஏற்று செல்பி எடுத்துக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. #ViratKohli
    இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கோலி, அதைத்தொடர்ந்து அங்கிருந்த ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது சிறுவன் ஒருவன் விராட்...  விராட்...  என்று கத்தி தன்னுடன் செல்பி எடுத்துக் கொள்ளுமாறு வேண்டினான். இதையடுத்து கோலி அவரது தந்தை வைத்திருந்த போனை வாங்கி செல்பி எடுத்தார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
    Next Story
    ×