search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நங்கூரமாக நின்ற விராட் கோலி, புஜாரா- மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 194-2
    X

    நங்கூரமாக நின்ற விராட் கோலி, புஜாரா- மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 194-2

    டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டின் 3-வது நாள் காலை முழுவதும் விராட் கோலி மற்றும் புஜாரா விக்கெட் இழக்காமல் சிறப்பாக விளையாடினார்கள். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 329 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 161 ரன்னில் சுருண்டது.

    168 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்க 124 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 33 ரன்களுடனும், விராட் கோலி 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.



    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. புஜாரா மற்றும் விராட் கோலி ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.

    புஜாரா 147 பந்துகளை சந்தித்து அரைசதம் அடித்தார். மறுமுனையில் நின்ற விராட் கோலி 82 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடியை வீழ்த்த இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் கடும் முயற்சிகள் எடுத்தனர். ஆனால் பலன்ஏதும் கிடைக்கவில்லை. இருவரும் 3-வது நாள் ஆட்டம் மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.



    இந்தியா 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 2 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 54 ரன்னுடனும், புஜாரா 56 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இன்று காலை விக்கெட் இழப்பின்றி 70 ரன்கள் எடுத்தது. தற்போது வரை இந்தியா 362 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
    Next Story
    ×