search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட் - இந்தியா முதல் இன்னிங்சில் 329 ரன்கள் சேர்த்து ஆல்அவுட்
    X

    டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட் - இந்தியா முதல் இன்னிங்சில் 329 ரன்கள் சேர்த்து ஆல்அவுட்

    இங்கிலாந்துக்கு எதிரான டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 329 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. #ENGvIND #ViratKohli #Rahane
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் எடுத்திருந்தது. ரிஷப் பந்த் 22 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. காலையில் லேசாக மழை பெய்ததால் ஆட்டம் அரைமணி நேரம் தாமதமாக தொடங்கியது. ரிஷப் பந்த், அஸ்வின் களம் இறங்கினார்கள்.



    92-வது ஓவரை பிராட் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் ரிஷப் பந்த் 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பிராட் வீசிய 94-வது ஓவரில் அஸ்வின் ஸ்டம்பை பறிகொடுத்தார். அஸ்வின் 17 பந்தில் 14 ரன்கள் சேர்த்தார்.

    அதன்பின் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஷமியை 3 ரன்னிலும், பும்ராவை டக்அவுட்டிலும் அடுத்தடுத்து வெளியேற்ற இந்தியா முதல் இன்னிங்சில் 94.5 ஓவரில் 329 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து அணி சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
    Next Story
    ×