search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் - டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது
    X

    இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் - டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது

    நாட்டிங்காமில் நடக்கவுள்ள இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. #ENGvIND #INDvENG
    நாட்டிங்காம்:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இதில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பர்மிங்காமில் நடந்த முதல் போட்டியில் 31 ரன் வித்தியாசத்திலும், லண்டனில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்திலும் இந்திய அணி தோற்று 0-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது.

    இந்நிலையில், இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இந்தியா அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.

    இந்த டெஸ்டில் ரிஷப் பந்த் அறிமுக ஆட்டக்காரராக களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  #ENGvIND #INDvENG
    Next Story
    ×