search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாய்ப்பு வழங்கப்பட்டால் டெஸ்டில் தொடக்க வீரராக களம் இறங்க தயார்- ரோகித் சர்மா
    X

    வாய்ப்பு வழங்கப்பட்டால் டெஸ்டில் தொடக்க வீரராக களம் இறங்க தயார்- ரோகித் சர்மா

    வாய்ப்பு வழங்கப்பட்டால் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்க தயாராக இருக்கிறேன் என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். #RohitSharma
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்டிலும் இந்தியா தோல்வியை சந்தித்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. முரளி விஜய், லோகேஷ் ராகுல், தவான் ஆகியோர் தென்ஆப்பிரிக்கா தொடரில் இருந்தே சொதப்பி வருகிறார்கள். அவர்களை அதிரடியாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

    இந்நிலையில் தொடக்க வீரராக களம் இறங்கும் வாய்ப்பு வழங்கப்பட்டால், களம் இறங்க தயார் என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘இதுவரை எனக்கு டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும் என்ற வாய்ப்பு வந்ததில்லை. ஆனால், அணி நிர்வாகம் விரும்பினால் தொடக்க வீரராக களம் இறங்க தயாராக இருக்கிறேன்.



    நான் ஒருநாள் போட்டியிலும் விளையாடும்போதோ, இந்திய அணியில் இடம்பிடித்தபோதோ நான் தொடக்க வீரராக களம் இறங்குவேன் நினைத்தது கூட கிடையாது. ஆனால் நாட்கள் செல்லசெல்ல அந்த வாய்ப்பு கிடைத்தது. ஆகவே, நான் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்க தயாராக இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் அதற்கு வாய்ப்பு அடைக்கப்படவில்லை. வாய்ப்பு என்னைத் தேடி வந்தால், அதை ஏற்றுக் கொள்வேன்’’ என்றார்.
    Next Story
    ×