என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரவி சாஸ்திரி, விராட் கோலி மீது கேள்விக் கணைகளை தொடுக்க தயாராகிறது பிசிசிஐ
Byமாலை மலர்13 Aug 2018 3:13 PM GMT (Updated: 13 Aug 2018 3:13 PM GMT)
இங்கிலாந்திற்கு எதிரான படுதோல்வியால் ரவி சாஸ்திரி, விராட் கோலியிடம் பல கேள்விகளை எழுப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. #BCCI #ViratKohli
இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் பெரிய அளவில் விமர்சனம் எழும்பவில்லை.
ஆனால் நேற்றுடன் முடிவடைந்த லார்ட்ஸ் டெஸ்டில் படுதோல்வியை சந்தித்தது. இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இதை இந்திய முன்னாள் வீரர்கள் மற்றும் பிசிசிஐ-யால் ஜீரணிக்க முடியவில்லை.
சொந்த மண்ணில் பல்வேறு அணிகளை வீழ்த்திய இந்தியா தென்ஆப்பிரிக்கா சென்று விளையாடியபோது தொடரை 1-2 என இழந்தது. அப்போது அதிக போட்டிகள் காரணமாக பழு அதிகமானது. அதனால் விளையாட முடியவில்லை என்று கூறப்பட்டது.
இதனால் இந்திய அணி நிர்வாகம் இங்கிலாந்து தொடரின்போது டி20, ஒருநாள் போட்டியில் விளையாடிய பின்னர், டெஸ்ட் போட்டியில் விளையாடினால் அங்குள்ள சூழ்நிலை பழக்கப்பட்டு விடும் என்று கூறியது.
அதன்படியே பிசிசிஐ ஏற்பாடு செய்தது. இதனால் இந்திய அணி நிர்வாகம் சாக்குபோக்கு சொல்ல முடியாது. இதற்கிடையே விராட் கோலி முதுகு வலி காரணமாக அவதிப்பட்டு வருகிறார்.
இந்திய அணி 3-வது போட்டியில் வருகிற சனிக்கிழமை (9-ந்தேதி) நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜ்-யில் விளையாடுகிறது. ஞாயிற்றுக்கிழமை அடுத்த இரண்டு போட்டிக்கான அணி அறிவிக்கப்பட இருக்கிறது. 3-வது போட்டியில் தோல்வியடைந்தால் தொடரை இழந்து விடும்.
இதனால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் விராட் கோலியிடம் கேள்விகள் கேட்க இருக்கிறது. மேலும், 2014-ம் ஆண்டு இந்திய அணி 1-3 என இங்கிலாந்து தொடரில் தோல்வியடைந்ததால்தான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த டங்கன் பிளெட்சர், துணை பயிற்சியாளர்கள் ஜோ தவேஸ் (பந்து வீச்சு), டிரெவோர் பென்னி (பீல்டிங் கோச்) ஆகியோரி அதிரடியாக நீக்கப்பட்டு ரவி சாஸ்திரி மானேஜராக நியமனம் செய்யப்பட்டார்.
அதன்பின் சஞ்சங் பாங்கர் பேட்டிங் கோச்சராகவும், ஆர் ஸ்ரீதர் பீல்டிங் கோச்சராகவும் நியமிக்கப்பட்டனர். இந்தியா பேட்டிங் மற்றும் ஸ்லிப் கேட்ச் ஆகியவற்றில் பலவீனமாக இருப்பதால் இவர்களுக்கு சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.
ஆனால் நேற்றுடன் முடிவடைந்த லார்ட்ஸ் டெஸ்டில் படுதோல்வியை சந்தித்தது. இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இதை இந்திய முன்னாள் வீரர்கள் மற்றும் பிசிசிஐ-யால் ஜீரணிக்க முடியவில்லை.
சொந்த மண்ணில் பல்வேறு அணிகளை வீழ்த்திய இந்தியா தென்ஆப்பிரிக்கா சென்று விளையாடியபோது தொடரை 1-2 என இழந்தது. அப்போது அதிக போட்டிகள் காரணமாக பழு அதிகமானது. அதனால் விளையாட முடியவில்லை என்று கூறப்பட்டது.
இதனால் இந்திய அணி நிர்வாகம் இங்கிலாந்து தொடரின்போது டி20, ஒருநாள் போட்டியில் விளையாடிய பின்னர், டெஸ்ட் போட்டியில் விளையாடினால் அங்குள்ள சூழ்நிலை பழக்கப்பட்டு விடும் என்று கூறியது.
அதன்படியே பிசிசிஐ ஏற்பாடு செய்தது. இதனால் இந்திய அணி நிர்வாகம் சாக்குபோக்கு சொல்ல முடியாது. இதற்கிடையே விராட் கோலி முதுகு வலி காரணமாக அவதிப்பட்டு வருகிறார்.
இந்திய அணி 3-வது போட்டியில் வருகிற சனிக்கிழமை (9-ந்தேதி) நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜ்-யில் விளையாடுகிறது. ஞாயிற்றுக்கிழமை அடுத்த இரண்டு போட்டிக்கான அணி அறிவிக்கப்பட இருக்கிறது. 3-வது போட்டியில் தோல்வியடைந்தால் தொடரை இழந்து விடும்.
இதனால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் விராட் கோலியிடம் கேள்விகள் கேட்க இருக்கிறது. மேலும், 2014-ம் ஆண்டு இந்திய அணி 1-3 என இங்கிலாந்து தொடரில் தோல்வியடைந்ததால்தான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த டங்கன் பிளெட்சர், துணை பயிற்சியாளர்கள் ஜோ தவேஸ் (பந்து வீச்சு), டிரெவோர் பென்னி (பீல்டிங் கோச்) ஆகியோரி அதிரடியாக நீக்கப்பட்டு ரவி சாஸ்திரி மானேஜராக நியமனம் செய்யப்பட்டார்.
அதன்பின் சஞ்சங் பாங்கர் பேட்டிங் கோச்சராகவும், ஆர் ஸ்ரீதர் பீல்டிங் கோச்சராகவும் நியமிக்கப்பட்டனர். இந்தியா பேட்டிங் மற்றும் ஸ்லிப் கேட்ச் ஆகியவற்றில் பலவீனமாக இருப்பதால் இவர்களுக்கு சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X