search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து அணியிடம் படுதோல்வி: வீரர்கள் தேர்வில் தவறு செய்துவிட்டோம் - கோலி ஒப்புதல்
    X

    இங்கிலாந்து அணியிடம் படுதோல்வி: வீரர்கள் தேர்வில் தவறு செய்துவிட்டோம் - கோலி ஒப்புதல்

    இங்கிலாந்து எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வீரர்களை தேர்வு செய்வதில் தவறு செய்துவிட்டதாக இந்திய கேப்டன் விராட்கோலி கூறியுள்ளார். #ViratKohli #ENGvIND

    லண்டன்:

    லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்திடம் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது.

    முதல் இன்னிங்சில் இந்தியா 107 ரன் எடுத்தது. இங்கிலாந்து 7 விக்கெட்டுக்கு 396 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. 289 ரன் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 130 ரன்னுக்குள் சுருண்டது.

    தோல்வி குறித்து இந்திய கேப்டன் விராட்கோலி  கூறியதாவது:-

    நாங்கள் விளையாடிய ஆட்டத்தை நினைத்து எந்த வகையிலும் பெருமை கொள்ள முடியாது. கடைசியாக விளையாடிய 5 டெஸ்ட் போட்டிகளில் இந்த ஆட்டத்தில் நாங்கள் முழுமையாக வீழ்த்தப்பட்டு விட்டோம்.

    நாங்கள் விளையாடிய விதத்தை பார்க்கும் போது தோல்விக்கு நாங்கள் தகுதியான அணி தான். நாம் விளையாடி கொண்டிருக்கும் போது வானிலை பற்றி சிந்தித்து கொண்டிருக்க முடியாது.

    வானிலையை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் ஆடுகளத்தையும், வானிலையையும் நன்கு பயன்படுத்திக் கொண்டனர். அவர்கள் எங்களை ரன் எடுக்க விடாமல் சிறப்பாக செயல்பட்டனர். அணியில் வீரர்கள் தேர்வில் தவறு செய்துவிட்டோம் என்று நினைக்கிறேன்.

    எனது முதுகுவலி பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அடுத்த டெஸ்ட் போட்டிக்கு 5 நாட்கள் இடைவெளி உள்ளது. அதற்குள் குணமடைந்து விடுவேன் என்றார்.

    நம்பர்-ஒன் அணியான இந்தியாவின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் முற்றிலும் திணறிவிட்டனர்.

    மேலும் வீரர்கள் தேர்விலும் தவறு செய்துவிட்டனர். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கினர்.

    குல்தீப் யாதவுக்கு பதிலாக இன்னும் ஒரு வேகப் பந்து வீச்சாளருடன் களம் இறங்கி இருக்கலாம். இந்த போட்டியில் குல்தீப் யாதவ் வெறும் 1 ஓவர் மட்டுமே வீசி இருந்தார்.

    முதல் டெஸ்ட்டில் இந்தியா போராடியே தோற்றது. ஆனால் 2-வது டெஸ்டில் இந்திய வீரர்கள் அனைத்து துறையிலும் தோல்வி அடைந்துவிட்டனர்.

    5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 18-ந் தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது.

    Next Story
    ×