search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: சிட்சிபாசை வீழ்த்தி ரபெல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்
    X

    ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: சிட்சிபாசை வீழ்த்தி ரபெல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்

    ரோஜர்ஸ் கோப்பை டென்னிசின் இறுதி போட்டியில் கிரீஸ் நாட்டை சேர்ந்த சிட்சிபாசை வீழ்த்தி ஸ்பெயின் நாட்டு வீரர் ரபெல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார். #RogersCup #Tsitsipas #RafaelNadal
    டோராண்டோ:

    ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கனடாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்), கிரீஸ் நாட்டை சேர்ந்த ஸ்டெபானோஸ் சிட்சிபாசுடன் மோதினர்.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து ரபெல் நடால் அதிரடியாக ஆடினார். இதனால் முதல் செட்டை 6 - 2 என எளிதில் கைப்பற்றினார்.

    இதையடுத்து, இரண்டாவது சுற்றில் சிட்சிபாஸ் நடாலுக்கு கடும் போட்டியளித்தார். ஆனாலும் நடாலின் அனுபவ ஆட்டத்தால் 7-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இந்த போட்டி 41 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

    இறுதியில், 6-2, 7-6 என்ற கணக்கில் வென்று ரபெல் நடால் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார். இந்த ஆண்டில் நடால் பெறும் ஐந்தாவது வெற்றி இதுவாகும்.

    டாப்-10 இடத்திற்குள் உள்ள 4 வீரர்களை தொடர்ச்சியாக வீழ்த்தி மிரள வைத்தவர் சிட்சிபாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×