search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனஞ்ஜெயாவின் சுழலில் சிக்கி 178 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது தென்ஆப்பிரிக்கா
    X

    தனஞ்ஜெயாவின் சுழலில் சிக்கி 178 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது தென்ஆப்பிரிக்கா

    கொழும்பில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை 178 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடையச் செய்தது இலங்கை. #SLvSA
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொழும்பில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இலங்கை, கேப்டன் மேத்யூஸ் (97), டிக்வெல்லா (43) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 8 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் குவித்தது.

    பின்னர் 300 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. டி காக்கை (54) விட மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற தென்ஆப்பிரிக்கா 24.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடிக் 121 ரன்னில் சுருண்டது.



    சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா 9 ஓவரில் 29 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட் அள்ளினார். இதனால் தென்ஆப்பிரிக்கா 178 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. முதல் மூன்று போட்டிகளையும் தென்ஆப்பிரிக்கா வென்றதால் 3-2 எனத் தொடரை கைப்பற்றியது.
    Next Story
    ×