search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிஎன்பிஎல் - கோவை அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மதுரை பாந்தர்ஸ்
    X

    டிஎன்பிஎல் - கோவை அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மதுரை பாந்தர்ஸ்

    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 2-வது குவாலிபையர் போட்டியில் கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. #TNPL #SMPvLKK
    திண்டுக்கல்:

    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 2-வது குவாலிபையர் திண்டுக்கல்லில் நடைபெற்றது. மதுரை பாந்தர்ஸ்க்கு எதிராக டாஸ் வென்ற கோவை கிங்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது.

    அந்த அணியின் தொடக்க வீரர் ஷாருக்கான் 4 ரன்னிலும், அபிநவ் முகுந்த் 28 ரன்னிலும், அதன்பின் வந்த ரவி குமார் ரோஹித் 5 ரன்னிலும் வெளியேறினார்கள். அதன்பின் வந்த அஸ்வின் வெங்கடராமன் 45 ரன்களும், பிரசாந்த் ராஜேஷ் 29 ரன்களும் அடிக்க கோவை கிங்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் சேர்த்தது. மதுரை பாந்தர்ஸ் அணியின் அபிஷேக் தன்வர் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    பின்னர் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் பேட்டிங் செய்தது. 19வது ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து மதுரை அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நாளை மறுநாள் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் இறுதிப்போட்டியில் திண்டுக்கல் அணியை மதுரை அணி எதிர்கொள்கிறது.
    Next Story
    ×