என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆபரேசன் முடிந்து இந்தியா திரும்பினார் சஹா- 3 வாரத்திற்குப் பிறகு களம் இறங்குகிறார்
Byமாலை மலர்10 Aug 2018 11:27 AM GMT (Updated: 10 Aug 2018 11:27 AM GMT)
இந்திய டெஸ்ட் அணி விக்கெட் கீப்பரான சஹா, இங்கிலாந்தில் வெற்றிகரமாக ஆபரேசனை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பியுள்ளார். #Saha
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி விக்கெட் கீப்பராக திகழந்து வருபவர் விருத்திமான் சஹா. ஐபிஎல் தொடரின்போது இவரது கைவிரவில் காயம் ஏற்பட்டது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரேயொரு டெஸ்டில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். பெங்களூர் கிரிக்கெட் அகாடமியில் காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கான பயிற்சியை மேற்கொண்டார்.
ஆனால் அது பயன் தராததால் சஹா அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதற்காக சஹா இங்கிலாந்து சென்று மான்செஸ்டரில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். தற்போது வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு இந்தியா திரும்பியுள்ளார்.
இன்னும் மூன்று வாரங்கள் கழித்து பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்தில் இருந்து மீண்டு வருதவற்கான பயிற்சியில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அறுவை சிகிச்சை குறித்து சஹா கூறுகையில் ‘‘காயத்திற்கு கட்டுப்போட்டபடி இருப்பது கடினமானது. கையை அங்கும் இங்குமாக அசைக்க இயலாது. ஒரே நிலையில் இருக்க வேண்டும். இது வேகப்பந்து வீச்சை எதிர்கொள்வதை விட கடினமானது. இது ஒன்றுதான் மீண்டும் அணிக்கு திரும்புவதற்கு சரியான வழி’’ என்றார்.
தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். பெங்களூர் கிரிக்கெட் அகாடமியில் காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கான பயிற்சியை மேற்கொண்டார்.
ஆனால் அது பயன் தராததால் சஹா அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதற்காக சஹா இங்கிலாந்து சென்று மான்செஸ்டரில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். தற்போது வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு இந்தியா திரும்பியுள்ளார்.
இன்னும் மூன்று வாரங்கள் கழித்து பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்தில் இருந்து மீண்டு வருதவற்கான பயிற்சியில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அறுவை சிகிச்சை குறித்து சஹா கூறுகையில் ‘‘காயத்திற்கு கட்டுப்போட்டபடி இருப்பது கடினமானது. கையை அங்கும் இங்குமாக அசைக்க இயலாது. ஒரே நிலையில் இருக்க வேண்டும். இது வேகப்பந்து வீச்சை எதிர்கொள்வதை விட கடினமானது. இது ஒன்றுதான் மீண்டும் அணிக்கு திரும்புவதற்கு சரியான வழி’’ என்றார்.
All Is Well..now back home..Thank You everyone for keeping me in your prayers. Grateful to @BCCI for taking care of every minute details. pic.twitter.com/Nhj9ogX8X0
— Wriddhiman Saha (@Wriddhipops) August 9, 2018
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X