என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உலக பேட்மிண்டன் போட்டி - காலிறுதியுடன் வெளியேறினார் சாய்னா
Byமாலை மலர்3 Aug 2018 8:12 AM GMT
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் காலிறுதியுடன் வெளியேறினார். #WorldBadmintonChampionships2018 #Saina
நான்ஜிங்:
24-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் நான்ஜின் நகரில் நடந்து வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை எதிர்கொண்டார். இதில் கடுமையாகப் போராடிய சாய்னா நேவால், 6-21, 11-21 என்ற செட்கணக்கில் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.
இதேபோல் கலப்பு இரட்டையர் பிரிவில் சிறப்பாக விளையாடிய சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- அஸ்வினி பொன்னப்பா ஜோடியும் காலிறுதியுடன் வெளியேறியது. இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- அஸ்வினி பொன்னப்பா ஜோடி சீனாவின் ஜெங் சிவெய்- ஹூவாங் யாகிகோன் ஜோடியை எதிர்கொண்டது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சீன ஜோடி, 21-17, 21-10 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்தியா தரப்பில் பி.வி.சிந்து, சாய் பிரனீத் ஆகியோர் மட்டுமே தற்போது களத்தில் உள்ளனர். #WorldBadmintonChampionships2018 #Saina
24-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் நான்ஜின் நகரில் நடந்து வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை எதிர்கொண்டார். இதில் கடுமையாகப் போராடிய சாய்னா நேவால், 6-21, 11-21 என்ற செட்கணக்கில் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.
இதேபோல் கலப்பு இரட்டையர் பிரிவில் சிறப்பாக விளையாடிய சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- அஸ்வினி பொன்னப்பா ஜோடியும் காலிறுதியுடன் வெளியேறியது. இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- அஸ்வினி பொன்னப்பா ஜோடி சீனாவின் ஜெங் சிவெய்- ஹூவாங் யாகிகோன் ஜோடியை எதிர்கொண்டது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சீன ஜோடி, 21-17, 21-10 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்தியா தரப்பில் பி.வி.சிந்து, சாய் பிரனீத் ஆகியோர் மட்டுமே தற்போது களத்தில் உள்ளனர். #WorldBadmintonChampionships2018 #Saina
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X