search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் ஊசி பயன்படுத்தக்கூடாது - இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவுறுத்தல்
    X

    ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் ஊசி பயன்படுத்தக்கூடாது - இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவுறுத்தல்

    ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் தடை செய்யப்பட்ட மருந்து மற்றும் ஊசிகளை பயன்படுத்தக்கூடாது என இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. #IndianAsianGames #NoNeedlePolicy #OlympicCouncil
    புதுடெல்லி:

    ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவில் வருகிற 18-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில், நமது நாட்டில் உள்ள அனைத்து தேசிய விளையாட்டு சம்மேளனங்களும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.



    அதில், ‘வீரர்கள் தனிப்பட்ட முறையில் ஊசிகளை வைக்கவோ, பயன்படுத்தவோ கூடாது என்ற ஒலிம்பிக் கமிட்டியின் விதிமுறையை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ‘ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் தடை செய்யப்பட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ள மருந்துகளை எக்காரணத்தை கொண்டும் வீரர்கள் யாரும் எடுத்து கொள்ளக்கூடாது. இந்த விஷயத்தில் தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் நிர்வாகிகள் கவனம் செலுத்தி நாட்டுக்கு தர்மசங்கடம் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    உடல் நலக்குறைவு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு டாக்டர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்து மற்றும் ஊசி தேவையெனில், விளையாட்டு கிராமத்தில் உள்ள இந்திய ஒலிம்பிக் சங்க அலுவலகத்தில் வைத்துக்கொள்ளலாம். அதனை உரிய முன் அனுமதி பெற்று பயன்படுத்தலாம்’ என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊசி மூலம் ஊக்க மருந்து பயன்படுத்த வாய்ப்பு இருப்பதால், அதனை யாரும் விதிமுறைக்கு புறம்பாக பயன்படுத்துவதை தடுக்க ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தீவிரமாக கண்காணிக்க முடிவு செய்துள்ளது.  #IndianAsianGames #NoNeedlePolicy #OlympicCouncil
    Next Story
    ×