search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவுன்ட்டி கிரிக்கெட்டிற்காக கரிபியன் பிரீமியர் லீக்கில் இருந்து விலகினார் ரஷித் கான்
    X

    கவுன்ட்டி கிரிக்கெட்டிற்காக கரிபியன் பிரீமியர் லீக்கில் இருந்து விலகினார் ரஷித் கான்

    ஆப்கானிஸ்தானின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் கவுன்ட்டி கிரிக்கெட்டிற்காக கரிபியன் பிரீமியர் லீக்கில் இருந்து விலகியுள்ளார். #RashidKhan #CPL
    ஆப்கானிஸ்தான் அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான். டி20 கிரிக்கெட்டின் நட்சத்திர பந்து வீச்சாளரான இவர், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 100 விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    இந்த வருடம் இறுதியில் நடைபெறும் கரிபியன் பிரீமியர் லீக் தொடரிவில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். தற்போது கவுன்ட்டி கிரிக்கெட்டில் சசக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கரிபிரியன் பிரீமியர் லீக் தொடருக்கு சென்றால் சசக்ஸ் அணிக்காக அவர் விளையாட முடியாது.



    இந்நிலையில் கரிபியன் பிரீமியர் லீக் தொடரில் இருந்து விலகி, தொடர்ந்து சசக்ஸ் அணிக்காக விளையாட முடிவு செய்துள்ளார். இன்னும் ஏழு போட்டிகள் உள்ளன. ரஷித் கான் தொடர்ந்து விளையாட இருப்பதால் இங்கிலிஷ் கவுன்ட்டி டி20 பிளாஸ்ட் தொடரில் சசக்ஸ் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×