search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரபெல் நடால் பெயரில் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் தொடர்
    X

    ரபெல் நடால் பெயரில் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் தொடர்

    ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த டென்னிஸ் வீரரான ரபெல் நடால் பெயரில் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. #Nadal
    ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த டென்னிஸ் வீரரான ரபெல் நடால் உலகின் நம்பர்-1 வீரராக திகழ்ந்து வருகிறார். 17 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ள நடால், செம்மண் தரையில் முடிசூடா மன்னராவார்.

    இவரது சாதனையை புகழும் வகையில் ரபா நடால் (Rafa Nadal ) என்ற ஏடிபி சேலஞ்சர் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொடர் நடாலின் சொந்த ஊரான மல்லோர்கா தீவில் அமைந்துள்ள மனாகோர் நகரில் நேற்று தொடங்கியது. இந்த தொடர் செப்டம்பர் 2-ந்தேதி வரை நடக்கிறது.



    அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடால், டென்னிஸ் போட்டி குறித்து கூறுகையில் ‘‘என்னுடைய நோக்கம் எல்லாம் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதல்ல. ஒவ்வொரு வாரமும் போட்டிக்கு தயாராகி வருகிறேன். வெற்றி பெற்றால் சிறப்பானது. விளையாட்டில் வெற்றி என்பது ஒரு சாராம்சம். ஆனால் வெற்றிக்காக போராடியது சிறப்பானது’’ என்றார்.
    Next Story
    ×