என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்- செரீனா வில்லியம்ஸ்க்கு வைல்டு கார்டு
Byமாலை மலர்26 July 2018 1:29 PM GMT (Updated: 26 July 2018 1:29 PM GMT)
ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் செரீனா வில்லியம்ஸ்க்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டுள்ளது. #RogersCup #Serena
டென்னிஸ் அரங்கில் கொடிகட்டி பறந்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த செரீனா வில்லியம்ஸ். அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடரின் இறுதிப் போட்டியில் ஜெர்மனியைச் சேர்ந்த ஏஞ்சலிக் கெர்பரிடம் 6-3, 6-3 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
என்றாலும் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் குழந்தை பெற்ற பிறகு, சுமார் 9 மாதத்திற்குள் டென்னிஸ் அரங்கிற்கு திரும்பி, இறுதிப் போட்டி வரை முன்னேறியதை அனைவரும் பாராட்டினார்கள்.
அடுத்து அமெரிக்கா ஓபன் டென்னிஸ் தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். விம்பிள்டன் வெற்றி அவருக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கா ஓபனுக்கு தயாராகும் வகையில் கனடாவின் மான்ட்ரியலில் ஆகஸ்ட் 3-ந்தேதி தொடங்கும் ரோஜர்ஸ் கோப்பை தொடரில் விளையாட முடிவு செய்தார்.
கடந்த நான்கு வருடங்களாக ரோஜர்ஸ் கோப்பையில் விளையாடாத செரீனாவிற்கு, ஒருங்கிணைப்பாளர்கள் வைல்டு கார்டு வழங்கியுள்ளனர்.
என்றாலும் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் குழந்தை பெற்ற பிறகு, சுமார் 9 மாதத்திற்குள் டென்னிஸ் அரங்கிற்கு திரும்பி, இறுதிப் போட்டி வரை முன்னேறியதை அனைவரும் பாராட்டினார்கள்.
அடுத்து அமெரிக்கா ஓபன் டென்னிஸ் தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். விம்பிள்டன் வெற்றி அவருக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கா ஓபனுக்கு தயாராகும் வகையில் கனடாவின் மான்ட்ரியலில் ஆகஸ்ட் 3-ந்தேதி தொடங்கும் ரோஜர்ஸ் கோப்பை தொடரில் விளையாட முடிவு செய்தார்.
கடந்த நான்கு வருடங்களாக ரோஜர்ஸ் கோப்பையில் விளையாடாத செரீனாவிற்கு, ஒருங்கிணைப்பாளர்கள் வைல்டு கார்டு வழங்கியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X