என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டிஎன்பிஎல் கிரிக்கெட்: திருச்சி அணி ஹாட்ரிக் வெற்றி பெறுமா? கோவையுடன் இன்று மோதல்
Byமாலை மலர்23 July 2018 6:56 AM GMT (Updated: 23 July 2018 6:56 AM GMT)
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ் அணியுடன் கோவை கிங்ஸ் அணி மோதுகிறது. #TNPL2018 #NammaOoruNammagethu
திண்டுக்கல்:
3-வது டி.என்.பி.எல்.(தமிழ்நாடு பிரிமீயர் லீக்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய 3 நகரங்களில் நடைபெற்று வருகிறது.
8 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.
நேற்றுடன் 12 ஆட்டங்கள் முடிந்துவிட்டன. திண்டுக்கல் டிராகன்ஸ் 6 புள்ளிகள் (4 போட்டி) வென்று முன்னிலையில் உள்ளது. காரைக்குடி காளை (3), திருச்சி வாரியர்ஸ் (2), டூட்டி பேட்ரியாட்ஸ் (3), மதுரை பாந்தர்ஸ் (3) ஆகிய நான்கு அணிகள் தலா 4 புள்ளியுடனும், கோவை கிங்ஸ் (3) அணி 2 புள்ளிகளுடனும் உள்ளன. காஞ்சி வீரன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (தலா 3 ஆட்டம்) ஆகிய அணிகள் புள்ளி எதுவும் பெறவில்லை.
டி.என்.பி.எல். போட்டியின் 13-வது ‘லீக்’ ஆட்டம் திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் பாபா இந்திரஜித் தலைமையிலான திருச்சி வாரியர்ஸ் - அபினவ் முகுந்த் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
திருச்சி வாரியர்ஸ் ‘ஹாட்ரிக்’ வெற்றி ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சை 4 விக்கெட் வித்தியாசத்திலும் 2-வது ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசை 31 ரன் வித்தியாசத்திலும் வென்றது.
பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் திருச்சி அணி திகழ்கிறது. பேட்டிங்கில் கேப்டன் இந்திரஜித், சுரேஷ்குமார் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ஆல்ரவுண்டர் வரிசையில் கணபதி-சந்திரசேகர் சிறப்பாக செயல்படுகிறார்.
கோவை கிங்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் காரைக்குடி காளையை சூப்பர் ஓவரில் வென்றது. அடுத்த 2 ஆட்டங்களில் திண்டுக்கல் டிராகன்ஸ் (8 விக்கெட்), டூட்டி பேட்ரியாட்ஸ் (11 ரன்) அணிகளிடம் தோற்றது.
ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் கோவை கிங்ஸ் இருக்கிறது. #TNPL2018 #NammaOoruNammagethu
3-வது டி.என்.பி.எல்.(தமிழ்நாடு பிரிமீயர் லீக்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய 3 நகரங்களில் நடைபெற்று வருகிறது.
8 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.
நேற்றுடன் 12 ஆட்டங்கள் முடிந்துவிட்டன. திண்டுக்கல் டிராகன்ஸ் 6 புள்ளிகள் (4 போட்டி) வென்று முன்னிலையில் உள்ளது. காரைக்குடி காளை (3), திருச்சி வாரியர்ஸ் (2), டூட்டி பேட்ரியாட்ஸ் (3), மதுரை பாந்தர்ஸ் (3) ஆகிய நான்கு அணிகள் தலா 4 புள்ளியுடனும், கோவை கிங்ஸ் (3) அணி 2 புள்ளிகளுடனும் உள்ளன. காஞ்சி வீரன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (தலா 3 ஆட்டம்) ஆகிய அணிகள் புள்ளி எதுவும் பெறவில்லை.
டி.என்.பி.எல். போட்டியின் 13-வது ‘லீக்’ ஆட்டம் திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் பாபா இந்திரஜித் தலைமையிலான திருச்சி வாரியர்ஸ் - அபினவ் முகுந்த் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
திருச்சி வாரியர்ஸ் ‘ஹாட்ரிக்’ வெற்றி ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சை 4 விக்கெட் வித்தியாசத்திலும் 2-வது ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசை 31 ரன் வித்தியாசத்திலும் வென்றது.
பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் திருச்சி அணி திகழ்கிறது. பேட்டிங்கில் கேப்டன் இந்திரஜித், சுரேஷ்குமார் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ஆல்ரவுண்டர் வரிசையில் கணபதி-சந்திரசேகர் சிறப்பாக செயல்படுகிறார்.
கோவை கிங்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் காரைக்குடி காளையை சூப்பர் ஓவரில் வென்றது. அடுத்த 2 ஆட்டங்களில் திண்டுக்கல் டிராகன்ஸ் (8 விக்கெட்), டூட்டி பேட்ரியாட்ஸ் (11 ரன்) அணிகளிடம் தோற்றது.
ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் கோவை கிங்ஸ் இருக்கிறது. #TNPL2018 #NammaOoruNammagethu
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X