என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டிஎன்பிஎல் - 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ்
Byமாலை மலர்22 July 2018 6:27 PM GMT (Updated: 22 July 2018 6:29 PM GMT)
டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி காஞ்சி வீரன்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. #TNPL #DindigulDragons #KanchiVeerans
திண்டுக்கல்:
டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. திண்டுக்கல்லில் நடந்த முதல் போட்டியில் டூட்டி பாட்ரியாட்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
இரண்டாவதாக நடைபெற்ற போட்டியில் காஞ்சி வீரன்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, காஞ்சி வீரன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விஷால் வைத்யா, சுரேஷ் லோகேஷ்வர் ஆகியோர் இறங்கினர்.
முதலில் திண்டுக்கல் அணியினரின் துல்லிய பந்துவீச்சில் காஞ்சி வீரன்ஸ் அணியினர் திணறினர். இதனால் 4 விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் எடுத்து தத்தளித்தது.
அடுத்து இறங்கிய மோகித் ஹரிஹரனும், பிரான்சிஸ் ரோகின்சும் பொறுப்புடன் விளையாடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.
இறுதியில் காஞ்சி வீரன்ஸ் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தனர். மோகித் 77 ரன்களுடனும், ரோகின்ஸ் 64 ரன்களுடனும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து 167 ரன்களை இலக்காக கொண்டு திண்டுக்கல் டிராகன்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஹரி நிஷாந்த் மற்றும் ஜெகதீசன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 33 பந்துகளில் 3 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்ரீநிவாஸ் பந்தில் நிஷாந்த் ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக அனிருத் மற்றும் ஜெகதீசன் முறையே 41 ரன்கள் மற்றும் 27 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய சதுர்வேத் அதிரடியாக விளையாடி 17 பந்துகளில் 3 சிக்சர் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் குவித்து திண்டுக்கல் அணியின் வெற்றியை பிரகாசப்படுத்தினார்.
இறுதியாக, திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 19.1 ஓவர்கள் 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்து 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மதுரை வீரன்ஸ் அணி தரப்பில் சுனில் சாம், ஸ்ரீனிவாஸ் மற்றும் சஞ்சய் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். சதுர்வேத் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். #TNPL #DindigulDragons #KanchiVeerans
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X