search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோலி தலைமையிலான இந்திய அணி முதன்முறையாக பைலேட்டரல் தொடரை இழந்துள்ளது
    X

    கோலி தலைமையிலான இந்திய அணி முதன்முறையாக பைலேட்டரல் தொடரை இழந்துள்ளது

    விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதன்முறையாக இருநாடுகளுக்கு இடையிலான தொடரை இழந்துள்ளது. #ViratKohli #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்றோடு முடிவடைந்தது. இதில் இந்தியா 1-2 என தொடரை இழந்தது. இதன்மூலம் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதன்முறையாக பைலேட்டரல் தொடரை இழந்துள்ளது.



    விராட் கோலி கடந்த 2017-ம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டன் பதவியை ஏற்றுக் கொண்டார். அதில் இருந்து இந்தியா இங்கிலாந்தை 2-1 எனவும், வெஸ்ட் இண்டீசை 3-1 எனவும், இலங்கைக்கு எதிராக 5-0 எனவும், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 4-1 எனவும், நியூசிலாந்திற்கு எதிராக 2-1 எனவும், தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக 5-1 எனவும் தொடரை கைப்பற்றியிருந்தது.

    தற்போது முதன்முறையாக 6 பைலேட்டரல் தொடருக்குப்பின் இங்கிலாந்திடம் தோல்வியை சந்தித்துள்ளது.
    Next Story
    ×