search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிம்பாப்வேயை 67 ரன்னில் சுருட்டி 9.5 ஓவரில் சேஸிங் செய்தது பாகிஸ்தான்
    X

    ஜிம்பாப்வேயை 67 ரன்னில் சுருட்டி 9.5 ஓவரில் சேஸிங் செய்தது பாகிஸ்தான்

    ஜிம்பாப்வேயை 67 ரன்னில் சுருட்டி 9.5 ஓவரிலேயே சேஸிங் செய்து தொடரை 3-0 எனக் கைப்பற்றியது பாகிஸ்தான். #ZIMvPAK #FaheemAshraf
    ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ள இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தது.

    இந்நிலையில் 3-வது ஆட்டம் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது. பாகிஸ்தானின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஜிம்பாப்வே வீரர்கள் திணறினார்கள். குறிப்பாக பஹீம் அஷ்ரப் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். இவர் 8.1 ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் கைப்பற்ற ஜிம்பாப்வே 25.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து விளையாடி 67 ரன்னில் சுருண்டது.



    பின்னர் 68 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. 9.5 ஓவரிலேயே 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 69 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 எனக்கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.
    Next Story
    ×