என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அணி தேர்வில் முன்னேற்றம் தேவை - விராட் கோலி
Byமாலை மலர்18 July 2018 5:19 AM GMT (Updated: 18 July 2018 6:14 AM GMT)
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த நிலையில், அணி தேர்வில் முன்னேற்றம் தேவை என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். #ENGvIND #ViratKohli
லீப்ஸ்:
முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 256 ரன் எடுத்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து 44.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 260 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் போட்டி தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் போட்டியில் இந்தியாவும், 2-வது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்று இருந்தன.
தோல்வி குறித்து கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-
இங்கிலாந்து போன்ற அணிக்கு எதிராக முழு திறமையை வெளிப்படுத்திருக்க வேண்டும். ஆடுகளம் மிகவும் மெதுவாக இருந்தது. இங்கு இதுபோன்ற ஆடுகளத்தை இதற்கு முன்பு பார்த்ததில்லை.
அணியில் சில மாற்றங்களை செய்தோம். தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடினார். ஆனால் அந்த உத்வேகத்தை அவரால் தக்க வைத்து கொள்ள முடியவில்லை.
புவனேஸ்வர்குமார் அனுபவம் வாய்ந்தவர். ஆனால் சிறப்பாக செயல்படாவிட்டால் மாற்றங்கள் செய்வது தேவையற்றது போன்று தோன்றும்.
எங்கள் அணிக்கு முன்னேற்றம் தேவையாக உள்ளது. ஒவ்வொரு அணி தேர்வும் பலம் வாய்ந்ததாக தெரிகிறது. ஆனால் இந்த தோல்வி நாங்கள் இன்னும் உழைக்க வேண்டும் என்று கூறி இருக்கிறது.
எங்களுக்கு 15 ஆட்டங்கள் உள்ளன. இதில் பலம் வாய்ந்த ஆடும் லெவன் அணியை கண்டறிய வேண்டும். உலக கோப்பை தொடருக்கு முன்பாக சரியான அணியை தேர்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அடுத்து இந்தியா- இங்கிலாந்து அணிகள் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற ஆகஸ்டு 1-ந்தேதி தொடங்குகிறது. #ENGvIND #ViratKohli #TeamIndia
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X