என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குரோசியா கால்பந்து அணியை வரவேற்ற இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள்
Byமாலை மலர்17 July 2018 4:19 PM GMT (Updated: 17 July 2018 4:19 PM GMT)
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இரண்டாம் இடம் பிடித்த குரோசியா அணிக்கு அந்நாட்டின் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வரவேற்பு அளித்தனர். #WorldCup2018
உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஜூன் 14-ந்தேதி முதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது. இந்த தொடரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் குரோசியா அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. லீக் சுற்றில் அர்ஜென்டினாவை 3-0 என துவம்சம் செய்தது. அதன்பின் நாக்அவுட், காலிறுதி மற்றும் அரையிறுதியை கடந்து முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் பிரான்ஸிடம் 2-4 என தோல்வியடைந்து வரலாற்றுச் சாதனையை தவறவிட்டது. என்றாலும் குரோசியா அணி வீரர்கள் அபார விளையாட்டிற்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
அவர்கள் 2-ம் இடத்தோடு நேற்று சொந்த நாடு திரும்பினார்கள். குரோசியா தலைநகரான சக்ரெப்பில் கால்பந்து அணிக்கு அமோக வரவேற்பு கொடுக்கப்பட்டது. குரோசியாவின் மக்கள் தொகை சுமார் 43 லட்சம்தான். இதில் இரண்டரை லட்சம் மக்கள் தலைநகரில் குவிந்து வரவேற்பு கொடுத்தார்கள். அத்துடன் வீரர்களிடம் ஆட்டோகிராப் வாங்கினார்கள்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் பிரான்ஸிடம் 2-4 என தோல்வியடைந்து வரலாற்றுச் சாதனையை தவறவிட்டது. என்றாலும் குரோசியா அணி வீரர்கள் அபார விளையாட்டிற்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
அவர்கள் 2-ம் இடத்தோடு நேற்று சொந்த நாடு திரும்பினார்கள். குரோசியா தலைநகரான சக்ரெப்பில் கால்பந்து அணிக்கு அமோக வரவேற்பு கொடுக்கப்பட்டது. குரோசியாவின் மக்கள் தொகை சுமார் 43 லட்சம்தான். இதில் இரண்டரை லட்சம் மக்கள் தலைநகரில் குவிந்து வரவேற்பு கொடுத்தார்கள். அத்துடன் வீரர்களிடம் ஆட்டோகிராப் வாங்கினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X