search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடைசி ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா பேட்டிங் - தினேஷ் கார்த்திக், புவி சேர்ப்பு
    X

    கடைசி ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா பேட்டிங் - தினேஷ் கார்த்திக், புவி சேர்ப்பு

    இந்தியாவிற்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. #ENGvIND #DK #Bhuvi
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் 4.30 மணிக்கு சுண்டப்பட்டது. மோர்கன் டாஸ் சுண்ட விராட் கோலி ஹெட் என அழைத்தார். ஆனால் டெய்ல் விழ, மோர்கன் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.

    இந்திய அணியில் லோகேஷ் ராகுல் நீக்கப்பட்டு தினேஷ் கார்த்திக் இடம்பிடித்துள்ளார். அதேபோல் உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு சர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார். சித்தார்த் கவுல் நீக்கப்பட்டு புவனேஸ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.



    முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவும், 2-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளால் இன்றைய போடடியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.
    Next Story
    ×