search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதி - ஆறரை மணி நேர போராட்டத்துக்கு பின் இறுதியில் நுழைந்தார் கெவின் ஆண்டர்சன்
    X

    விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதி - ஆறரை மணி நேர போராட்டத்துக்கு பின் இறுதியில் நுழைந்தார் கெவின் ஆண்டர்சன்

    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் அரையிறுதி போட்டியில் தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன் ஆறரை மணி நேரம் போராடி அமெரிக்க வீரர் இஸ்னரை வென்று இறுதிப் போட்டியில் நுழைந்தார். #Wimbledon2018 #JohnIsner #KevinAnderson
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

    முதலாவது அரையிறுதியில் 8-ம் நிலை வீரரான தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன் 9-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஜான் இஸ்னரை எதிர்கொண்டார்.



    ஆண்டர்சன் முதல் செட்டை 7-6 என கைப்பற்றினார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இரண்டாவது மற்றும் மூன்றாவது  செட்களை 6-7, 6-7 என ஜான் இஸ்னர் கைப்பற்றினார்.

    இறுதியில் நுழைய வேண்டிய கட்டாயத்தில் ஆண்டர்சன் சிறப்பாக ஆடினார். அதனால் நான்காவது செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் ஐந்தாவது சுற்று அவ்வளவு எளிதாக முடியவில்லை. ஆண்டர்சனும், இஸ்னரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்ட நேரம் கூடிக் கொண்டே போனது.
    கடைசியாக,  ஆண்டர்சன் 26-24 என்ற கணக்கில் இஸ்னரை தோற்கடித்து இறுதிப்போட்டியில் நுழைந்தார்.

    இறுதியில்,  ஆண்டர்சன் 7-6(6), 6-7(5), 6-7(9), 6-4, 26-24  என்ற செட்களில் இஸ்னரை வென்றார். இந்த அரையிறுதி போட்டி சுமார் ஆறரை மணி நேரம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×