search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரான்ஸ் வெற்றியை குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு அர்பணித்த போக்பா
    X

    பிரான்ஸ் வெற்றியை குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு அர்பணித்த போக்பா

    அரையிறுதியில் பெற்ற வெற்றியை இங்கிலாந்து வீரர் பால் போக்பா குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு அர்ப்பணித்துள்ளார். #WorldCup2018 #thaicaverescue
    தாய்லாந்து நாட்டில் கால்பந்து விளையாடும் 11 முதல் 16 வயதுடைய 12 சிறுவர்கள், தங்களது பயிற்சியாளருடன் குகையில் சிக்கிக் கொண்டனர். 18 நாட்கள் குகையில் தவித்த அவர்களை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். சிறுவர்களை மீட்ட மீட்புக் குழுவினருக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்த செய்தி உலகக்கோப்பையில் விளையாடும் பிரான்ஸ் நட்சத்திர வீரரான பால் போக்பாவையும் எட்டியது.

    நேற்று பெல்ஜியத்திற்கு எதிரான ஆட்டத்தில் பிரான்ஸ் 1-0 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த வெற்றியை தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு அர்பணிப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    போக்பா தனது டுவிட்டர் பக்கத்தில் மீட்கப்பட்ட சிறுவர்களின் படத்தை வெளியிட்டு ‘‘இன்றைய நாளில் ஹீரோக்கள் ஆன சிறுவர்களுக்கு இந்த வெற்றி செல்கிறது. வெல்டன் பாய்ஸ், நீங்கள் எப்போதும் வலிமையானவர்கள்’’ ட்வீட் செய்துள்ளார்.
    Next Story
    ×