என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒருநாள் போட்டியில் விராட் கோலி 4-வது இடத்தில் களமிறங்க வேண்டும்- கங்குலி
Byமாலை மலர்10 July 2018 3:39 PM GMT (Updated: 10 July 2018 3:39 PM GMT)
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி 4-வது இடத்தில் களம் இறங்கி பேட்ஸ்மேன் செய்ய வேண்டும் என்று கங்குலி தெரிவித்துள்ளார். #ENGvIND
இந்திய அணி உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இலங்கையில் நடைபெற்ற தொடரின்போது இந்திய அணி பல்வேறு பரிசோதனை செய்தது. அப்போது கேஎல் ராகுல், கேதர் ஜாதவ், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரகானே ஆகியோரை நான்காவது இடத்தில் களமிறக்கியது.
ஆனால் எந்த வீரரும் அந்த இடத்தில் சரியாக விளையாடவில்லை. இங்கிலாந்திற்கு எதிராக டி20 தொடரில் கேஎல் ராகுலை 3-வது இடத்தில் களமிறக்கி கோலி 4-வது இடத்தில் களமிறங்கினார். இதற்கு நல்ல ரிசல்ட் கிடைத்தது. கேஎல் ராகுல் முதல் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். கோலி கடைசி இரண்டு போட்டியில் தலா 40 ரன்களுக்கு மேல் அடித்தார்.
இந்நிலையில் விராட் கோலி ஒருநாள் போட்டியில் 4-வது இடத்தில் களமிறங்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘டி20 தொடரை பார்த்தீர்கள் என்றால், பேட்டிங் வரிசை சரியாக அமைந்ததாக நான் நினைக்கிறேன். கேஎல் ராகுல் 3-வது இடத்திலும், விராட் கோலி 4-வது இடத்திலும் களம் இறங்கி விளையாடியதால், பேட்டிங்கில் இருந்து வந்த பிரச்சனை தீர்ந்ததாக நினைக்கிறேன்.
ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு இதுபோன்று களம் இறங்குவது சிறப்பானதாக அமையும் என்பது என்னுடைய ஒட்டுமொத்த நம்பிக்கை. விராட் கோலி ஒருநாள் தொடரில் இந்த எண்ணத்தோடுதான் களம் இறங்குவார் என்று நினைக்கிறேன்’’ என்றார்.
ஆனால் எந்த வீரரும் அந்த இடத்தில் சரியாக விளையாடவில்லை. இங்கிலாந்திற்கு எதிராக டி20 தொடரில் கேஎல் ராகுலை 3-வது இடத்தில் களமிறக்கி கோலி 4-வது இடத்தில் களமிறங்கினார். இதற்கு நல்ல ரிசல்ட் கிடைத்தது. கேஎல் ராகுல் முதல் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். கோலி கடைசி இரண்டு போட்டியில் தலா 40 ரன்களுக்கு மேல் அடித்தார்.
இந்நிலையில் விராட் கோலி ஒருநாள் போட்டியில் 4-வது இடத்தில் களமிறங்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘டி20 தொடரை பார்த்தீர்கள் என்றால், பேட்டிங் வரிசை சரியாக அமைந்ததாக நான் நினைக்கிறேன். கேஎல் ராகுல் 3-வது இடத்திலும், விராட் கோலி 4-வது இடத்திலும் களம் இறங்கி விளையாடியதால், பேட்டிங்கில் இருந்து வந்த பிரச்சனை தீர்ந்ததாக நினைக்கிறேன்.
ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு இதுபோன்று களம் இறங்குவது சிறப்பானதாக அமையும் என்பது என்னுடைய ஒட்டுமொத்த நம்பிக்கை. விராட் கோலி ஒருநாள் தொடரில் இந்த எண்ணத்தோடுதான் களம் இறங்குவார் என்று நினைக்கிறேன்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X