search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிராவிட் வேண்டுகோளை ஏற்று அதிக தொடர்களை ஏற்பாடு செய்தது பிசிசிஐ
    X

    டிராவிட் வேண்டுகோளை ஏற்று அதிக தொடர்களை ஏற்பாடு செய்தது பிசிசிஐ

    இந்திய ‘ஏ’ அணிக்கு அதிக அளவிலான தொடர்கள் இல்லாததால், பிசிசிஐ-க்கு தலைமை பயிற்சியாளர் டிராவிட் கோரிக்கை விடுத்திருந்தார். #Dravid
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிராவிட் இந்தியா ‘ஏ’ மற்றும் 19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். தற்போது இந்திய அணி இங்கிலாந்தில் முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

    அதன்பின் நீண்டு நாட்களுக்கு இந்தியா ‘ஏ’ அணிக்கு போட்டியில்லை. இளம் வீரர்கள் அவரது விளையாட்டை சீரான வழியில் தொடர அதிக அளவிலான போட்டிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் பிசிசிஐ-க்கு டிராவிட் கோரிக்கை விடுத்திருந்தார். ராகுல் டிராவிட்டின் கோரிக்கையை ஏற்று ஜூலை மாதம் இறுதியில் இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’, ஆஸ்திரேலியா ‘ஏ’, தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான் தொடரை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.



    அதேபோல் இந்தியா ‘ஏ’ அணி தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கெதிராக இரண்டு நான்கு நாட்கள் கொண்ட போட்டிக்கும், ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கெதிராக இரண்டு போட்டிகள் கொண்ட தொடருக்கும் ஏற்பாடு செய்துள்ளது. அத்துடன் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான அணிக்கும், ஆப்கானிஸ்தான், நேபாளம் அணிகளுக்கு இடையிலான தொடருக்கும் ஏற்பாடு செய்துள்ளது.
    Next Story
    ×