என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு
Byமாலை மலர்14 Jun 2018 4:13 AM GMT (Updated: 14 Jun 2018 4:13 AM GMT)
இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. #INDvAFG
பெங்களூரு:
இந்தியாவுக்கு வந்துள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது. டெஸ்ட் அந்தஸ்து பெற்ற பிறகு ஆப்கானிஸ்தான் பங்கேற்கும் முதல் டெஸ்ட் என்பதால் இது வரலாற்று சிறப்புமிக்க போட்டியாக பார்க்கப்படுகிறது.
இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக தவான், முரளி விஜய் ஆகியோர் களம் இறங்கினர்.
சர்வதேச அரங்கில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆப்கானிஸ்தான் அணி பலம் வாய்ந்த இந்திய அணியுடன் மோதும் போட்டி கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
‘நம்பர் ஒன்’ அணியான இந்திய அணி ரஹானே தலைமையில் களம் இறங்குகிறது. காயத்தால் அவதிப்படும் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. உள்ளூரில் ஆடுவது இந்தியாவுக்கே சாதகமான அம்சம் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் கவனமுடன் ஆட வேண்டியது அவசியமாகும்.
சமீபத்தில் வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் போட்டித் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்திய ஆப்கானிஸ்தான் அணியினர், அதே வேகத்தில் தங்களது ‘கன்னி’ டெஸ்ட் போட்டியில் விளையாடுகின்றனர்.
பேட்டிங்கில் பெரிய அளவில் இல்லாத ஆப்கானிஸ்தான் அணி ரஷித்கான், முஜீப் ரகுமான், முகமது நபி ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் மூலம் மிரட்டுவோம் என்று சவால் விட்டுள்ளது. குறுகிய வடிவிலான போட்டி போன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ரஷித்கான் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று அந்த அணியின் பயிற்சியாளர் பிலிப் சிமோன்ஸ் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணி முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளதையொட்டி அந்நாட்டு மக்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: எம்.விஜய், தவான், லோகேஷ் ராகுல், புஜாரா, ரஹானே (கேப்டன்), கருண் நாயர், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா அல்லது குல்தீப் யாதவ், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ்.
ஆப்கானிஸ்தான்: முகமது ஷாசாத், ஜாவித் அகமதி, ரமத் ஷா, அஸ்கார் ஸ்டானிக்ஜாய் (கேப்டன்), நசிர் ஜமால் அல்லது ஹஷ்மத்துல்லா சாஹிதி, முகமது நபி, அப்சர் ஜஜாய், ரஷித்கான், அமிர் ஹம்சா அல்லது ஜாகிர் கான், யாமின் அகமத்ஜாய், முஜீப் ரகுமான் அல்லது வபதார்.#INDvAFG
இந்தியாவுக்கு வந்துள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது. டெஸ்ட் அந்தஸ்து பெற்ற பிறகு ஆப்கானிஸ்தான் பங்கேற்கும் முதல் டெஸ்ட் என்பதால் இது வரலாற்று சிறப்புமிக்க போட்டியாக பார்க்கப்படுகிறது.
இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக தவான், முரளி விஜய் ஆகியோர் களம் இறங்கினர்.
சர்வதேச அரங்கில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆப்கானிஸ்தான் அணி பலம் வாய்ந்த இந்திய அணியுடன் மோதும் போட்டி கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
‘நம்பர் ஒன்’ அணியான இந்திய அணி ரஹானே தலைமையில் களம் இறங்குகிறது. காயத்தால் அவதிப்படும் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. உள்ளூரில் ஆடுவது இந்தியாவுக்கே சாதகமான அம்சம் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் கவனமுடன் ஆட வேண்டியது அவசியமாகும்.
சமீபத்தில் வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் போட்டித் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்திய ஆப்கானிஸ்தான் அணியினர், அதே வேகத்தில் தங்களது ‘கன்னி’ டெஸ்ட் போட்டியில் விளையாடுகின்றனர்.
பேட்டிங்கில் பெரிய அளவில் இல்லாத ஆப்கானிஸ்தான் அணி ரஷித்கான், முஜீப் ரகுமான், முகமது நபி ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் மூலம் மிரட்டுவோம் என்று சவால் விட்டுள்ளது. குறுகிய வடிவிலான போட்டி போன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ரஷித்கான் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று அந்த அணியின் பயிற்சியாளர் பிலிப் சிமோன்ஸ் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணி முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளதையொட்டி அந்நாட்டு மக்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: எம்.விஜய், தவான், லோகேஷ் ராகுல், புஜாரா, ரஹானே (கேப்டன்), கருண் நாயர், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா அல்லது குல்தீப் யாதவ், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ்.
ஆப்கானிஸ்தான்: முகமது ஷாசாத், ஜாவித் அகமதி, ரமத் ஷா, அஸ்கார் ஸ்டானிக்ஜாய் (கேப்டன்), நசிர் ஜமால் அல்லது ஹஷ்மத்துல்லா சாஹிதி, முகமது நபி, அப்சர் ஜஜாய், ரஷித்கான், அமிர் ஹம்சா அல்லது ஜாகிர் கான், யாமின் அகமத்ஜாய், முஜீப் ரகுமான் அல்லது வபதார்.#INDvAFG
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X