search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்தில் பிரகாசிக்க மனதளவிலும் பலமாக இருக்க வேண்டும் - முரளி விஜய்
    X

    இங்கிலாந்தில் பிரகாசிக்க மனதளவிலும் பலமாக இருக்க வேண்டும் - முரளி விஜய்

    இங்கிலாந்து நாட்டில் அந்நாட்டுக்கு எதிரான தொடரில் பிரகாசிக்க உடல் மட்டுமின்றி மனதளவிலும் பலமாக இருப்பது அவசியம் என இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய் கூறியுள்ளார். #INDvENG #MuraliVijay #ENGvIND


    இந்திய கிரிக்கெட் அணி வருகிற ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அப்போது அந்நாட்டு அணியுடன் 5 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து தொடரில் பிரகாசிக்க உடல் மட்டுமின்றி மனதளவிலும் பலமாக இருப்பது அவசியம் என இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய் கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட், வெளியே சென்று நம்மை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு அளிக்கிறது. அது நிச்சயமாக ஒரு சுவாரஸ்யமான விளையாட்டாக இருக்கும், அதைத்தொடர்ந்து வரும் போட்டிகளில் இங்கிலாந்து தொடருக்கான உத்திகள் தொடங்கும். ஆப்கானிஸ்தான் ஒரு தரமான அணி, டெஸ்ட் போட்டி எந்த ஒரு வீரருக்கும் சவாலாக இருக்கும். 

    சிறந்த வீரர்களும் இங்கிலாந்து மைதானங்களில் விளையாட கஷ்டப்படுவார்கள். இத்தகைய சூழ்நிலைகளில் ரன்கள் எடுப்பது ஒரு மனநிலை சம்பந்தப்பட்ட விளையாட்டு மற்றும் நீங்கள் தொடர்ந்து விளையாட வேண்டும். உங்கள் நேரத்தை செலவழிப்பது முக்கியம், உங்களை நம்புங்கள், ரன்கள் தானாக வரும். என் வாழ்க்கை முழுவதும் நான் அதை தான் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

    தனிப்பட்ட விளையாட்டை விட போட்டியை வெல்வதே முக்கியம் என அனைவரிடமும் நான் கூறி வருகிறேன். நாம் நன்றாக விளையாடிய பின், இறுதியில் நமது அணி தோல்வியடைந்தால் அது மகிழ்ச்சியாக இருக்காது. இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக இந்திய அணிக்காக ஒரு சில போட்டிகளில் விளையாட விரும்புகிறேன், ஆனால் அது அட்டவணையை சார்ந்தது, எப்படி இருந்தாலும் சமாளித்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #INDvENG #MuraliVijay #ENGvIND
    Next Story
    ×