என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சஞ்ஜிதா சானுவிற்கு ஆதரவாக இருப்போம்- இந்திய பளுதூக்கும் பெடரேசன்
Byமாலை மலர்1 Jun 2018 11:25 AM GMT (Updated: 1 Jun 2018 11:25 AM GMT)
சஞ்ஜிதா சானு ஊக்கமருந்து பயன்படுத்தினார் என்ற உலக பளுதூக்கும் பெடரேசனின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என இந்திய பளுதூக்கும் பெடரேசன் கூறியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் கடந்த மாதம் காமன்வெல்த் கேம்ஸ் போட்டி நடைபெற்றது. இதில் பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனை சஞ்ஜிதா பானு 53 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.
இந்நிலையில் திடீரென நேற்று உலக பளுதூக்கும் பெடரேசன், சஞ்ஜிதா பானு மாதிரியை சோதனை செய்ததில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளது எனத் தெரிவித்திருந்தது. இதனால் பதக்கம் பறிபோவதோடு, சஞ்ஜிதா பானு தடையை எதிர்கொள்ளக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சஞ்ஜிதா பானுக்கு எதிரான முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என இந்திய பளுதூக்கும் பெடரேசன் உறுதியளித்துள்ளது.
இதுகுறித்து இந்திய பளுதூக்கும் பெடரேசன் பொதுச் செயலாளர் சஹ்தேவ் யாதவ் கூறுகையில் ‘‘நாங்கள் முடிவை பெற்ற பிறகு, வழக்கில் வாதாட முன்னணி வழங்கறிஞரை வாடகைக்கு அமர்த்துவோம். சஞ்ஜிதா பானு எந்தவித ஊக்கமருந்தையும் எடுத்திருக்கமாட்டார் என்பதை நான் உறுதியாக கூறுகிறேன். அவர் அப்பாவி என்பதை நாங்கள் நிரூபிப்போம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது’’ என்றார்.
சஞ்ஜிதா பானு 2014-ம் ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெலத் போட்டியின்போது 48 கிலோ எடைப்பிரிவில் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் திடீரென நேற்று உலக பளுதூக்கும் பெடரேசன், சஞ்ஜிதா பானு மாதிரியை சோதனை செய்ததில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளது எனத் தெரிவித்திருந்தது. இதனால் பதக்கம் பறிபோவதோடு, சஞ்ஜிதா பானு தடையை எதிர்கொள்ளக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சஞ்ஜிதா பானுக்கு எதிரான முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என இந்திய பளுதூக்கும் பெடரேசன் உறுதியளித்துள்ளது.
இதுகுறித்து இந்திய பளுதூக்கும் பெடரேசன் பொதுச் செயலாளர் சஹ்தேவ் யாதவ் கூறுகையில் ‘‘நாங்கள் முடிவை பெற்ற பிறகு, வழக்கில் வாதாட முன்னணி வழங்கறிஞரை வாடகைக்கு அமர்த்துவோம். சஞ்ஜிதா பானு எந்தவித ஊக்கமருந்தையும் எடுத்திருக்கமாட்டார் என்பதை நான் உறுதியாக கூறுகிறேன். அவர் அப்பாவி என்பதை நாங்கள் நிரூபிப்போம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது’’ என்றார்.
சஞ்ஜிதா பானு 2014-ம் ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெலத் போட்டியின்போது 48 கிலோ எடைப்பிரிவில் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X