search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு பிரீமியர் லீக்- காரைக்குடி காளை அணியின் பயிற்சியாளராகிறார் எஸ் பத்ரிநாத்
    X

    தமிழ்நாடு பிரீமியர் லீக்- காரைக்குடி காளை அணியின் பயிற்சியாளராகிறார் எஸ் பத்ரிநாத்

    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் எஸ் பத்ரிநாத் காரைக்குடி காளை அணியின் பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார். #TNPL #KaraikudiKaalai
    தமிழ்நாடு பிரீமியர் லீக் இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்துவிட்டு 3-வது சீசனுக்கு தயாராகியுள்ளது. 3-வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் இன்று நடைபெற்றது. இந்நிலையில் காரைக்குடி காளை அணியின் பயிற்சியாளராக எஸ் பத்ரிநாத் செயல்பட இருக்கிறார்.

    பத்ரிநாத் இந்திய அணிக்காகவும், நீண்ட காலம் தமிழ்நாடு அணிக்காகவும் விளையாடியவர். காரைக்குரை காளை அணியின் தலைமை பயிற்சியாளராக தமிழ்நாட்டின் முன்னாள் வீரரான பிசி பிரகாஷ் உள்ளார். அவருக்கு உதவியாளராக செயல்பட இருக்கிறார்.



    பத்ரிநாத் இந்திய அணிக்காக 2 டெஸ்ட், 7 ஒருநாள் மற்றும் ஒரெயொரு டி20 போட்டியில் விளையாடியுள்ளார். 145 முதல்தர போட்டிகளில் விளையாடி 32 சதம், 45 அரைசதங்களுடன் 10245 ரன்கள் அடித்துள்ளார்.
    Next Story
    ×