search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய வீரர்கள் மற்ற லீக் தொடர்களிலும் விளையாட வேண்டும்- கிறிஸ் கெய்ல்
    X

    இந்திய வீரர்கள் மற்ற லீக் தொடர்களிலும் விளையாட வேண்டும்- கிறிஸ் கெய்ல்

    இந்திய வீரர்கள் மற்ற டி20 லீக் தொடர்களிலும் விளையாட வேண்டும் என்று அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் விருப்பம் தெரிவித்துள்ளார். #ChrisGayle
    இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் டி20 லீக் தொடரை நடத்தி வருகிறது. இதுபோன்று ஆஸ்திரேலியா பிக்பாஷ், வெஸ்ட் இண்டீஸ் கரீபியன் டி20 லீக், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் சூப்பர் லீக், வங்காள தேசம் வங்காளதேசம் பிரீமியர் லீக் தொடர்களை நடத்தி வருகிறது.

    மற்ற நாட்சைச் சேர்ந்த வீரர் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்கள். ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்ற டி20 லீக் தொடரில் விளையாட வீரர்களுக்கு அனுமதி அளிப்பதில்லை.

    இந்நிலையில் இந்தியாவில் திறமையான வீரர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்கள் வெளிநாட்டு டி20 லீக் தொடரில் விளையாட வேண்டும் என்று டி20 ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் விருப்பம் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து கிறிஸ் கெய்ல் கூறுகையில் ‘‘இந்தியாவில் திறமையான வீரர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களுக்கு ஐபிஎல் தொடர் விளையாடு வாய்ப்பு கிடைப்பதில்லை. அவர்கள் வெளிநாட்டில் நடைபெறும் லீக் தொடரில் விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன்.

    இதுபோன்ற வீரர்களுக்கு தேசிய அணியில் விளையாட இடம் கிடைக்கமாமல் போகிறது. இதனால் இந்திய அணியில் இடம்பிடிப்பது கடினமாகிறது. இதனால் மற்ற டி20 லீக்கில் ஆடினால் சர்வதேச அளவிற்கான அனுபவத்தை பெற முடியும்’’ என்றார்.
    Next Story
    ×