search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெரீனாவை வென்ற கூட்டம் கோப்பை வெல்லாமல் போய்விடுமா - ஹர்பஜன் சிங்
    X

    மெரீனாவை வென்ற கூட்டம் கோப்பை வெல்லாமல் போய்விடுமா - ஹர்பஜன் சிங்

    நேற்று நடைபெற்ற பிளே-ஆப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குறித்து ஹர்பஜன் சிங் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். #VIVOIPL #IPL2018 #CSKvSRH #HarbhajanSingh

    மும்பை:

    ஐபிஎல் தொடரின் முதல் பிளே-ஆப் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவரில் 139 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த சென்னை அணி 19.1 ஒவரில் 140 ரன்கள் எடுத்து, 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 



    இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி குறித்து ஹர்பஜன் சிங் டுவிட்டரில் பதிவு செய்திருப்பதாவது: “விதைகள் கீழ் நோக்கி எறியப்பட்டால் தான் விருட்சங்கள் மேல் நோக்கி வளரும்.@chennaiipl மக்கள் எங்களை விதைகளாய் வித்திட்டார்கள் இன்று அரை இறுதியில் வென்று உங்கள் முன் விஸ்வரூபம் எடுத்துள்ளோம்.மெரீனாவை வென்ற கூட்டம் கோப்பை வெல்லாமல் போய்விடுமா.அறம் கூற்று சொல்லும் #நெஞ்சுக்குநீதி”.

    இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். #VIVOIPL #IPL2018 #CSKvSRH #HarbhajanSingh
    Next Story
    ×