search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பதற்றம் இல்லாமல் விளையாடினால் சாம்பியன்ஸ் கோப்பை லிவர்பூல் அணிக்கே- சேபி அலோன்சா
    X

    பதற்றம் இல்லாமல் விளையாடினால் சாம்பியன்ஸ் கோப்பை லிவர்பூல் அணிக்கே- சேபி அலோன்சா

    சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட்டிற்கு எதிராக பதற்றம் இல்லாமல் விளையாடினால் லிவர்பூல் அணிக்கே வெற்றி என அலோன்சா தெரிவித்துள்ளார். #UCL
    சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி சனிக்கிழமை நள்ளிரவு நடைபெறுகிறது. இதில் ஸ்பெயின் அணியான ரியல் மாட்ரிட் - இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் விளையாடும் லிவர்பூல் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரண்டு முறை தொடர்ச்சியாக கோப்பையை கைப்பற்றியுள்ள ரியல் மாட்ரிட் ஹாட்ரிக் வெற்றியை ருசிக்க துடிக்கிறது.

    அதேவேளையில் லிவர்பூல் அணி சமீப காலமாக ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. லிவர்பூல் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை ருசித்து வருகிறது. இதனால் ரியல் மாட்ரிட் அணிக்கு கடும் சவாலாக விளங்கும் என லிவர்பூல் அணிக்காகவும், ரியல் மாட்ரிட் அணிக்காகவும் விளையாடிய சேபி அலோன்சோ தெரிவித்துள்ளார்.



    லிவர்பூல் அணி 2005-ம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்லும்போதும், ரியல் மாட்ரிட் 2014-ம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக்கையும் வெல்லும்போது இரண்டு அணியிலும் இடம்பிடித்திருந்தவர் அலோன்சோ. இரு அணிகளுக்காகவும் தலா ஐந்தாண்டுகள் விளையாடியுள்ளார்.

    சாம்பயின்ஸ் லீக் இறுதிப் போட்டி குறித்து சேபி அலோன்சா கூறுகையில் ‘‘அனைத்து லிவர்பூல் அணி வீரர்களுக்கும் இதுதான் முதல் சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி. லிவர்பூல் எமோசனல் சைடு. கால்பந்துக்கு இது முக்கியமானது. அவர்கள் சரியான உற்சாகம் மற்றும் உத்வேகத்தை பெற்றால், சரியான வழியில் இறுதிப் போட்டியை அனுக முடியும்’’ என்றார்.
    Next Story
    ×